வெள்ளி, 20 மார்ச், 2009

வெளியில் நல்ல மழை

தாயம் சீக்கிரத்தில் விழாது
அஞ்சாங்காயில் போய்விடும்
பல்லாங்குழி கொப்பரை வராது
ஒற்றையா ரெட்டையா
யூகம் தவறாகவேயிருக்கும்
சிவப்பிற்கு துணை விழாத கேரம்
எப்போதும் கறுப்புக் காய்கள் தானெனக்கு
சதுரங்கத்திற்கு தந்திரம் பற்றாது
சீட்டுக்கும் அதுவே
புலம் பெயர்ந்த
சக ஆட்டக்காரிகளின்
பட்டப்பெயர்கள் நிழலாட
அனிச்சையாய் இதழ் மலர
சூடான தேனீருடன்
சாய்வு நாற்காலியில்,,,,,,,,,,,

வெளியில் நல்ல மழை

12 கருத்துகள்:

ச.முத்துவேல் சொன்னது…

/அனிச்சையாய் இதழ் மலர/
இக்கவிதையைப் படிக்க எனக்கும் ,மேற்கண்ட வரிகளின் அனுபவம்.
நல்லாருக்குங்க.

யாத்ரா சொன்னது…

வாங்க முத்துவேல், பகிர்வுக்கு நன்றி

ஆதவா சொன்னது…

சிறுவயதில் நான் ஆடிய விளையாட்டுகளை நினைவுபடுத்தியது உங்கள் கவிதை..

வாழ்த்துகள்

பெயரில்லா சொன்னது…

சிவப்பிற்கு துணை விழாத கேரம்
எப்போதும் கறுப்புக் காய்கள் தானெனக்கு///

நமக்கு கேரம்னாலே ரொம்ப பிடிச்ச விளையாட்டு... கவிதைகளில் கேரத்தை பற்றி முதல் தடவை படிக்கிறேன்...

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

கவிதை பிடித்திருக்கிறது.

உள்ளே நானிருந்தேன்
வெளியில் நல்ல மழை
ஒரு சொரூப நிலை

என்ற நகுலனின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது.

யாத்ரா சொன்னது…

நன்றி ஷீ நிசி

சுந்தர் சார் நன்றி
நினைவுப்பாதை, நவீனன் டைரி மற்றும் நகுலன் கவிதைகள் தொகுப்பு எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் அனேகம், அதன் நீட்சியாகவுமிருக்கலாம்,இல்லாத சுசிலாவுடன் செத்துக்கொண்டே வாழ்ந்தே போய்ச்சேர்ந்தார், இவங்களையெல்லாம் பார்க்கிற கொடுப்பினை வாய்க்கவில்லையே என்பது தான் குறை

இன்னும் நாய்கள், வாக்குமூலம் மற்றும் இவர்கள் புத்தக அலமாரியில் காத்திருக்கிறது வாசிப்புக்காக

யாத்ரா சொன்னது…

ஆதவா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

தமிழன்-கறுப்பி... சொன்னது…

எத்தனை வயது உங்களுக்கு, ஆரம்பமே இப்படியிருக்கிறதென்றால்...!

யாத்ரா சொன்னது…

வயதை விடுங்கள் தமிழன், இயற்பெயரே தெரியக்கூடாதென்றிருந்தேன், தெரியும்படி நேர்ந்துவிட்டது,

எழுத்தில் தெரியவில்லையா வயது

தமிழ் நம்மை இணைத்திருக்கிறது,

தங்களின் தோழமைக்கு நன்றி

ச.முத்துவேல் சொன்னது…

யாத்ரா, உயிரோசையில் வந்தபிறகு மீண்டும் ஊன்றிப் படித்துப்பார்த்தேன். இப்போது இக்கவிதை, எனக்குப் பலசூழல்களில் பொருந்துவதாக, பன்முகத்தன்மையோடு தெரிகிறது. நான் இன்னும் நிறைய தேற வேண்டும்.

யாத்ரா சொன்னது…

நன்றிங்க முத்துவேல்

இராவணன் சொன்னது…

ம்ம்ம்ம்.

மிக பிடித்த கவிதை.