வியாழன், 26 ஜூலை, 2012

இரை

இரையென கொத்துகிறது
சலனமற்ற நீர்ப்பரப்பை
பறவை
அலகு நீர்தொடும் கணத்தில்
தப்பி மறைகிறது இரை
தன் அலகுக்கு
அகப்படாமல்
காலங்காலமாய்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
தன் பிம்பத்துடனான
வேட்டை