வியாழன், 23 டிசம்பர், 2010

புத்தகவெளியீட்டு விழா அழைப்பிதழ்




ப்ரியத்திற்குரிய நண்பர்களுக்கு,

வணக்கம், பிப்ரவரி 2009 முதல் இந்த வலைப்பூவில் எழுதத்துவங்கி இன்றுவரையிலான நிகழ்வுகள் அவற்றின் நினைவுகள் என எல்லாம் எல்லாம் மனதடைத்திருக்கிறது இப்போது, எவ்வளவோ நினைவுகள், துவத்திலிருந்தே இணைய நண்பகளின் உற்சாகமும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் விமர்சனங்களும் வழிகாட்டுதல்களும் தான் இதை சாத்தியப் படுத்தியிருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியையும் ப்ரியங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த நெகிழ்வாக உணர்கிறேன்.

இக்கவிதைகளை எழுதிய தருணத்தில் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டு அறிமுகப்படுத்தி வாழ்த்தி உற்சாகப்படுத்திய இணைய நண்பர்களுக்கும், வெளியிட்ட உயிரோசை மற்றும் சிக்கிமுக்கி இணைய இதழ்களுக்கும், நவீனவிருட்சம், மணல்வீடு, அகநாழிகை சிற்றிதழ்களுக்கும், பரிசளித்து மகிழ்வூட்டிய உரையாடல் இலக்கிய அமைப்பிற்கும் மிக்க நன்றி.

இந்த தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்து மிகச்சிறப்பாக பதிப்பித்திருக்கும் அகநாழிகை பதிப்பகம், அன்பிற்குரிய பொன்.வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் என் அன்பும் நன்றியும்.

இவ்வெளியீட்டு விழா அறிவிப்பை தங்கள் தளங்களில் மற்றும் கூகுள் பஸ்களில் வெளியிட்டு வாழ்த்தும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

நிகழ்விற்கு சிறப்புரை வழங்கி வெளியிட சம்மதித்த திரு. ராஜசுந்தரராஜன் மற்றும் திரு. ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

வருகிற புதன்கிழமை 29 டிசம்பர் 2010 அன்று சென்னை கே.கே.நகர், முனுசாமிசாலை, டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இப்புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி.