துயரத்தின் ரேகை படர்ந்து
முகம் துவண்டு
இன்னும் சற்றைக்கெல்லாம்
தளும்பிவிடும் விழிகளுடன்
என் முன்னால்
நிலைக்கண்ணாடியில் அமர்ந்திருந்தவனை
அப்படியே பார்த்திருந்தேன் சிலகணங்கள்
ஏனோ முத்தமிடத்தோன்றியது
அவன் கன்னத்தில்
இதழ்குவித்து
அவன் கன்னத்தை நெருங்க
அதற்குள் அவன்
உதடுகுவித்து முத்தமிட்டுவிட்டான்
என் உதடுகளில்
அல்லது
என் முத்தம் தான்
குறி தவறிவிட்டதா
திங்கள், 29 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)