tag:blogger.com,1999:blog-73518563976992280412024-03-13T15:55:03.606-07:00யாத்ராமானுட புரிதலை நோக்கிய பயணம்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-65312814078757095542012-07-26T04:40:00.000-07:002012-07-26T04:40:33.977-07:00இரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இரையென கொத்துகிறது<br />
சலனமற்ற நீர்ப்பரப்பை<br />
பறவை<br />
அலகு நீர்தொடும் கணத்தில்<br />
தப்பி மறைகிறது இரை<br />
தன் அலகுக்கு<br />
அகப்படாமல்<br />
காலங்காலமாய்<br />
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது<br />
தன் பிம்பத்துடனான<br />
வேட்டை</div>
யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-87286602669960995362011-01-19T07:17:00.000-08:002011-01-19T07:19:45.317-08:00நரன் கவிதைகள்<span style="font-weight:bold;">பருத்திக்காடு</span><br /><br />பருத்தி அறுவடை முடிந்த<br />கரிசல் வெளியில்<br />பாடல் காட்சியொன்றின்<br />படப்பிடிப்பு நடக்கிறது<br />பாடல் காட்சியில் நடனமாடும்<br />துணைநடிகையின்<br />கால்களுக்கிடையே பூத்திருக்கிறது<br />பருத்தியொன்று<br />காட்சியில் அவள் நடனமாடும்போது<br />தாள லயங்களுககு ஏற்றவாறு<br />அப்பருத்தியும் ஆடுகிறது<br />உணவு வேளை இடைவேளையின்போது<br />நனைந்த பருத்தியைப் பறித்துவிட்டு<br />வேறொன்றைப் பூக்கச் செய்கிறாள்<br />காலிடையில்<br /><br />படப்பிடிப்பை முடித்துச் செல்லும் அவளோடு<br />பெயர்ந்து செல்கிறது<br />ஒரு பருத்திக்காடு<br /><br /><br /><span style="font-weight:bold;">கானகம்</span><br /><br />புத்தகத்தின் <br />73ம் பக்கம்<br />கிழிக்கப்பட்டிருக்கிறது<br />அதில் தான்<br />தம் கரும்புரவியை<br />மேய்ந்து வரும்படிக்கு<br />அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்<br />கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்<br />வாசகன்<br />குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்<br />தேடி அலைகின்றனர்<br />கிழிந்து விழுந்த கானகத்தில்<br /><br /><span style="font-weight:bold;">உப்பளம்</span><br /><br />உப்பளத்தில் அழுதுகொண்டிருந்தாள்<br />ஒருவன் அவள் அழுகையைப் <br />பிரித்து பிரித்து<br />பாத்தி கட்டிக்கொண்டிருந்தான்<br />சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்தன<br />அவள் அழுகையை<br />வெவ்வேறு ஊர்களுக்கு<br />ஏற்றிச் செல்லவிருக்கும்<br />லாரிகள் ...<br />லாரிகள் ...<br /><br /><span style="font-weight:bold;">முதலை</span><br /><br />நீர்த்தாவரத்தின் <br />இலையின் அடியில் ஊரும்<br />நீர்ப்புழுவை விழுங்கும் மீனைச்<br />சற்றைக்கெல்லாம் கவ்விவிட்டது<br />அக்கொக்கு<br />கொக்கின் தொண்டைக்குள்<br />மீன் நீந்தி இறங்கிகொண்டிருக்கையில்<br />கொக்கின் கால்களைப்<br />பற்றி இழுக்கிறது ஏரி முதலையொன்று<br />ஒரு குறியில்<br />ஒரு பாய்ச்சலில்<br />ஒரு வாயில்<br />ஊர்வன நீந்துவன பறப்பன என<br />அம்முதலை மூன்று இரையை<br />கவ்விக்கொண்டிருக்கிறது<br />இப்போது<br /><br /><span style="font-weight:bold;">நிலைக்கண்ணாடி</span><br /><br />எதிர்வீட்டில் நிலைக்கதவின் நேர் எதிர்புறம்<br />மாட்டிவைத்திருக்கும்<br />மிகப்பெரிய நிலைக்கண்ணாடியில்<br />தினமும் கதவைத் திறந்துகொண்டு<br />கண்ணாடிக்குள் சென்று மறைந்துவிடுகின்றனர்<br />யாரேனும் அழைப்புமணியை அழுத்தும்போது<br />கண்ணாடியைத் திறந்துகொண்டு<br />பார்க்கிறார்கள்<br />பின் மீண்டும் கண்ணாடிக்குள் சென்று<br />மறைந்துவிடுகிறார்க்ள்<br />ஒரு நாள் அவ்வீட்டைக் காலிசெய்து<br />சாமான்களையெல்லாம் எடுத்துப்போனார்கள்<br />வாகனமொன்றில் ஏற்றி.<br />மிகப் பெரிய அந்நிலைக்கண்ணாடியைப் பிடித்தபடி<br />அமர்ந்திருந்தான் வேலையாள்.<br />மெல்ல நகரும் வாகனத்தில் கண்ணாடிக்குள் சென்று<br />மறைந்துகொண்டிருந்தன <br />அவ்வீதியிலுள்ள வீடுகள் எல்லாம்<br /><br /><span style="font-weight:bold;">தார்ச்சாலைகள் வெண்நிறக்கோடுகள்</span><br /><br />வனங்களின் நடுவே<br />போடப்பட்ட தார்ச்சாலைகள்<br />அவற்றின் நடுவே<br />வலப்புறத்தையும் <br />இடப்புறத்தையும்<br />பிரித்துச் செல்லும்<br />வெண்நிறக் கோடுகள்<br />எப்போதும் அவற்றின் மேலேறி நடந்து செல்கின்றன<br />சில வரிக்குதிரைகள்<br />வரிக்குதிரைகளின் மேலேறிச் செல்கின்றன சில<br />தார்ச்சாலைகள் சில வெண்நிறக் கோடுகள்<br /><br /><br />•<br />அபூர்வ நிகழ்வுகளின் நொடிப்பொழுதை வாழ்வின் பெரும்பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன. ( பின்னட்டையில் )<br /><br /><br /><br />உப்புநீர் முதலை<br />காலச்சுவடு பதிப்பகம்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-54792247415756417462011-01-12T02:02:00.000-08:002011-01-12T02:06:35.225-08:00கலாப்ரியா கவிதைகள்அவளின் பார்வைகள்<br /><br />காயங்களுடன் <br />கதறலுடன் ஓடி<br />ஒளியுமொரு பன்றியைத்<br />தேடிக் கொத்தும் <br />காக்கைகள்<br /><br />•<br /><br />தொலைவில் புணரும்<br />தண்டவாளங்கள்<br />அருகில் போனதும்<br />விலகிப் போயின<br /><br />•<br /><br />கைகள் காதலித்த<br />கண்ணாடி தம்ளர் <br />காதலை ஏற்காதென்<br />காலடியில்<br />நொறுங்கிச் சிதறியது<br />உடைந்த துகள்கள்<br />காலில் குத்தி<br />உறவாகி விட்டன<br />என் ரத்தத்தோடு<br /><br />•<br /><br />எச்சியிலைத் தொட்டியில்<br />ஏறிவிழும்<br />தெருநாயின்<br />லாவகம் எனக்கொரு <br />கவிதை தரப்பார்க்கிறது<br /><br />•<br /><br />கரித்துண்டொன்றை<br />தரையில் பைத்தியக்<br />கிறுக்கலாய்ப் படம் <br />போட்டுச் சாகடிக்கிறேன்<br />எரித்துக்கொள்வதைவிட இது<br />எவ்வளவோ மேல்<br /><br />•<br /><br />கூட்டிலிருந்து <br />தவறிவிழுந்த <br />குஞ்சுப்பறவை<br />தாயைப் போலவே<br />தானும் பறப்பதாய்<br />நினைத்தது<br />தரையில் மோதிச்சாகும்<br />வரை<br /><br />•<br /><br />அந்திக்கருக்கலில்<br />இந்தத் திசை தவறிய<br />பெண் பறவை<br />தன் கூட்டுக்காய்<br />தன் குஞ்சுக்காய்<br />அலைமோதிக் கரைகிறது<br />எனக்கதன்<br />கூடும் தெரியும்<br />குஞ்சும் தெரியும்<br />இருந்தும்<br />எனக்கதன்<br />பாஷை புரியவில்லை<br /><br />•<br /><br />என்ன செய்தும் <br />இவன் காலடியில் <br />தலைவைத்துப் பணிய<br />மறுக்கிறது நிழல்<br />இவனின் நிழல்<br /><br />•<br /><br />தூண்டில் மீனின்<br />துடிப்புகளைப் பாடுவதற்காய்<br />மட்டுமே நான்<br />ஆற்றோரம் காத்திருக்கிறேன்<br />அரை நிர்வாணிகளுக்காயில்லை<br /><br />•<br /><br />ஒப்பனைகளை<br />அழித்துவிட்டு<br />என்னுடைய <br />நாடகத்தை<br />நானே <br />என்று பார்க்க<br /><br />•<br /><br />ஒரு<br />தென்னம்பிள்ளையின் <br />கீழ்<br />சில கனகாம்பரம்<br />ஒரு செம்பருத்திச் செடி<br />எனத் தோட்டம் வளர்த்து<br />தண்ணீர் பாய்ச்சுகிற<br />தம்பியின்<br />மத்யான நிழல் மகிழ்ச்சிகளை<br />உன்னால்<br />அவனின் பரிமாணப் பிரக்ஞை<br />வெளித் தெரிய <br />கவிதையாக்க முடிகிறதா<br /><br />•<br /><br />எப்படியென்று <br />தெரியவில்லை<br />தாமரையிலையில்<br />நரகல்<br /><br />•<br /><br />அத்தனை <br />தூரம்<br />கடந்து<br />பார்க்க<br />வந்திறங்கினேன்<br />கூப்பிடும் தூரத்தில்<br />எதிர்த்திசையில் <br />பஸ் ஏறப்போகிறான்<br />கூப்பிடவில்லை<br /><br />•<br /><br />என் தலைக்குள் வலி<br /><br />“தொடந்து மழை நாட்களில்<br />தொழுவம் விட்டகல<br />மறந்த பன்றிகளும்<br />காய்ந்து<br />மக்கிப்<br />போக முடியாத<br />மந்தை நரகல்களும்”<br />என்றொரு படிமம்<br />திணிந்து கொண்டு<br /><br />•<br /><br /><br />கலாப்ரியா கவிதைகளைத் தேடித்தேடி வனம்புகுதல் தொகுப்பு மட்டுமே கிடைந்திருந்தது. அவரின் பழைய கவிதைத்தொகுப்புகள் கிடைக்காதிருந்தது. அவரின் மிகச்சில ஆரம்பகால கவிதைகளை அவரின் வலைத்தளத்தில் வாசித்திருந்தேன், அவரின் மொத்த கவிதைகளையும் வாசிக்க மிகுந்த ஆவலாயிருந்தது. தற்போது சந்தியா பதிப்பகத்தில் கலாப்ரியா கவிதைகள் மொத்த தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. இன்னும் முழுதாக வாசிக்கவில்லை, வாசித்தவரையில், சில கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன்<br /><br /><span style="font-weight:bold;">கலாப்ரியா பற்றி விக்ரமாதித்யன்<br /></span><br />எழுபதுகளின் கவிஞரான கலாப்ரியாவின் கவிக்குரல் முழுக்கவும் தனியான ஒன்று, அன்றும் சரி, இன்றும் சரி, நவீன தமிழ்க் கவிதையிலேயே தனித்த ஒரு விசேஷமான வடிவம், நெகிழ்ச்சிகூடிய ஒரு அருமையான கட்டமைப்பு, ஆகச்சிறந்த ஒரு தனிக் கவிதைமொழி, அழகுபட்ட ஒரு கவிதைகூறல் ( பின்நாள்களில் இது கதைகூறல் போல இருக்கும் ) செய்நேர்த்தி, காட்சிகளாய் விரியும் உலகம் இவையெல்லாம் ஒன்று கூடித் திரண்டு சமைந்த புதுக்கவிதைகள் அவருடையவை, இந்த பண்புயல்புகளுககெல்லாம் மேலாய்ச் சொல்லவேண்டிய ஒரு பண்பியல்பு, மனவெழுச்சி கொண்ட கவிதைகள் அவை என்பது. எவ்வளவு பெரிய கவிதைக் கூட்டத்திலும் கலாப்ரியா கவிதையைத் தனியே அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதிலிருந்தே அருடைய தனித்தன்மையை கவி ஆளுமையைத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்க் கவிதை சரித்திரத்திலேயே கலாப்ரியா கவிதைகள் தனியானவை, இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க் கவிதையிலேயே காணக்கிடைக்காத உணர்வெழுச்சியும் துடியும் கட்டவிழ்ந்த மனவெளிப்பாடும் கொண்ட அபூர்வமான கவிதைகள், முற்றிலும மனத்தடைகளை உதிர்த்து உதறியெழந்து நிற்கும கவிதைகள். கலாப்ரியாவின் கவித்துவம் ஒப்பிட இயலாதது என்பது மட்டுமில்லை. ஒரு இனத்தில் / மொழியில் எப்பொழுதோ நிகழ்க்கூடியதுமாகும்.<br /><br />நவீன கவிதை என்று மட்டுமில்லை, தமிழ்க் கவிதையிலேயே பிரமிள், நகுலன், ஞானக்கூத்தன், தேவதேவன், ஆகியோரின் பங்களிப்பும் ஸ்தானமும் எந்த அளவுக்கு முக்கியமானதும் நிச்சயமானதுமோ அதே அளவுக்குக் கலாப்ரியாவின் இடமும் கொடையும் உறுதியானதும் முதன்மையானதும் ஆகும், இந்த ஐந்து பேரையும் எந்தத் தயக்கமுமில்லாமல் மகாகவிகளாக வரித்துக் கொள்ளலாம். காலம் இப்படியே இவர்களை ஏற்றுக் கொள்ளும்.<br /><br />கலாப்ரியா கவிதைகள்<br />சந்தியா பதிப்பகம்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-91572292350389901262011-01-05T01:19:00.000-08:002011-01-05T02:43:17.754-08:00மயிரு கவிதைத்தொகுப்பு வெளியீட்டன்று " கவிஞர் ராஜசுந்தரராஜன் அவர்களின் உரை "APRIL is the cruelest month, breeding <br />Lilacs out of the dead land, mixing <br />Memory and desire, stirring <br />Dull roots with spring rain. <br /><br />இவை டி.எஸ்.எலியட்டின் The Waste Land கவிதையின் தொடக்க அடிகள். <br /><br /><br />//கூட்டி விடவிடப்<br />படியும் புழுதியாய்<br />வாசல் கோலத்தின் பின்<br />அழிந்தும் அழியாத <br />நேற்றையக் கோலமாய்<br /><br />புலம் பெயர்ந்த <br />சக ஆட்டக்காரிகளின் <br />பட்டப் பெயர்கள் நிழலாட<br /><br />அவர்கள் இறங்கவேண்டிய <br />நிறுத்தத்தில் அதன் தாய்<br />அழ அழ அழைத்துச்சென்ற குரல் <br />இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது<br /><br />தெய்வானைக்கு ஒரு மகன் இரண்டு மகளாம்<br />அடிக்கடி அவள் பேச்சில்<br />என் பெயர் வருமாம்.<br /><br />அகவிழுதுகள் பிடித்தாடுகின்றன குரங்குகள்<br /><br />காலத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாய்ப்<br />புரட்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.<br /><br />அறுபட்ட கோழியின் <br />தூவலாய் மிதக்கின்றன<br />கைவிடப்பட்ட பிரியங்கள்<br /><br />மலக் கழிவென எஞ்சியிருக்கும் நினைவுகள்<br />இன்னும் இன்னபிற என<br />சூன்யக்காரனின் மூலப்பொருட்களையொத்த<br />சேகரங்களனைத்தையும்<br /><br />நீர்த்திரை விழிகளுடன்<br />தூசு படிந்த நிழற்படத்தை <br />முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்<br />காய்ந்து உதிர்ந்த இலைச் <br />சருகுகளை விலக்கிப்<br />பார்க்கிறது காற்றுடன் மழை<br />கல்லறை எழுத்துகளை<br /><br />கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்<br />பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாம்<br /><br />இன்னும் இன்னும் எங்கெங்கிருந்தோ<br />முளைத்துக்கொண்டே இருக்கின்றன <br />அழிக்க அழிக்க சுவடுகள்<br /><br />அகத்தின் அப்புறப்படுத்தவியலாத<br />சேகரங்கள் அழுகி நாறுகின்றன<br />உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில் <br />தொடர்ந்த தோல்வி, இயலாமை, கழிவிரக்கம்<br /><br />நினைவு பொல்லாதது// <br /><br />இவை கவிஞர் யாத்ராவின் வரிகள். ஒற்றையொரு கவிதையொன்றின் வரிகள் அல்ல. இவரது ‘மயிரு’ என்னும் நூலில் உள்ள கவிதைகள் பலவற்றிலும் அங்கங்கே அழுந்திக் கிடப்பவை. நினைவின் நோவுகண்டு பிறந்தனவாக இருக்கின்றன யாத்ராவின் பெரும்பான்மையான கவிதைகள்.<br /><br />இந் நூல் வருவதற்கு முன்பு ‘எப்படியிருக்கீங்க’ என்கிற கவிதை ஒன்றை மட்டுமே வாசித்திருந்தேன். அதில் கவிஞர் பயன்படுத்தி இருந்த விவரனைகள் என்னை மிகவும் பாதித்திருந்தன.<br /><br />கவிதைக்கு உரிய கச்சாப் பொருள் அல்ல விவரணைகள். அது நாவலுக்கு உரியது. என்றாலும் கவிதையில் விவரணைகளைக் கொண்டுவந்த கவிஞர்களும் இருக்கிறார்கள். கலாப்ரியா, கல்யாண்ஜி முதலியோர். ஆனால் விவரணைகளைச் சொல்முறையாக அல்லாமல் உத்தியாகப் பயன்படுத்துகிற யாத்ரா அதுவழி நம் உள்ளத்தை அறுக்கிறார். எளிய கவிதைகளும் இவ் விவரணை வழி வேறு தளத்துக்கு உயரவும் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, //வள்ளி புதுக்கோட்டையில்// என்று தொடங்கி, பெயர் அறிந்த ஓரொருத்தியும் ஓரோர் ஊரில் இருப்பதாக விவரித்து, பெயர் அறியாத பெண்களைப் பற்றியும் கவலைப் பட்டு, //பார்கவி எந்த ஊருக்குப் போவாளோ?// என்று முடிகிற கவிதை, இந்தியப் பெண்களின் லாட்டரிச்சீட்டு நிலைமையை உணர்த்தி நம்மை அவமானத்துக்கு உள்ளாக்குகிறது.<br /><br />எழுதியவர் எழுதிவைத்த படி அல்ல, கவிதை அதை வாசிக்கிறவர் புரிந்துகொள்கிற அளவில்தான் பரிமாணம் கொள்கிறது. ‘எப்படியிருக்கீங்க’, ‘இருப்பு’ முதலிய கவிதைகளை வாசித்த அளவில் யாருக்கும் பாராட்டத் தோன்றும். ஆனால், எளிமை வெளிப்பாட்டின் காரணமாக, அவ்வளவு முக்கியமில்லை என்று தள்ளிவிடக் கூடிய கவிதைகளும் உண்டு. அவற்றில் இரண்டு கவிதைகளை எடுத்துப் பேசி, ஏனைய கவிதைகளும் சாதாரணமானவை அல்ல என்று சுட்ட விரும்புகிறேன்.<br /> <br />தண்ணீரில்<br />தன் பிம்பம்<br />தழுவுதல்<br />தற்கொலையா<br /><br />இந்த எளிய கவிதையில், //தண்ணீரில்// என்னும் முதல் அடியை வாசித்த அளவில் தண்ணீருடைய அத்தனை குணங்களும் என் மண்டைக்குள் புரள்கின்றன. எந்தத் தண்ணீரில் என்றொரு குறுக்கு வினா எழுந்து, அந்தத் தண்ணீரைப் பற்றியும் சில அடிப்படை உண்மைகள் கணக்கில் வருகின்றன. அப்புறம், //தன் பிம்பம்// என்பது தனது சாயை என்றும் the image about one’s own self என்றும் தோன்றுகிறது. தண்ணீரில் பிரதிபலிக்கிற பிம்பம் என்றாலும் சரி, ‘தண்ணி’யடித்த மப்பில் தன்னைப் பற்றி உண்டாகிற தோற்றம் என்று கொண்டாலும் சரி, it’s an image of uncertainity. இப்பொழுது, //தழுவுதல்//. உறுதிப்பாடற்ற அந்தப் படிமத்தைத் தழுவுதல் அல்லது வரித்துக் கொள்ளுதல், இறுதி அடியில் வினவப் படுவது போல, //தற்கொலையா//? Is that a suicide? தண்ணீர்ப் பரப்பை ஈரத்தோடு கூடிய ஒரு stratum எனக் கொண்டால் அது அன்பின் குறியீடு ஆகிறது. அன்பில் பிரதிபலிக்கும் பிம்பத்தைத் தழுவுதல் தற்கொலை ஆகுமா? இதற்கிடையில் நாம் அறிந்த நார்சிசஸ், ஆத்மாநாம் என இவர்களும் நினைவுக்கு வந்தால்... இது அத்துணை சாதாரணமானதொரு கவிதையா?<br /><br />//மன்னிக்கவும்<br />இன்றைக்கு<br />கவிதையேதுமில்லை<br />உங்களை வெறுமனே அனுப்புகிறேன்//<br /><br />என்கிறார் இன்னொரு கவிதையில். ‘எதுவுமே நிகழவில்லை இன்று’ என்னும் தலைப்பின் கீழ் வருகின்றன இந்த வரிகள்:<br /><br />//புன்னகை ஒட்டிய முகங்கள்<br />நெகிழவைத்த மேலாளர் நண்பர்கள்<br />காத்திருக்க வைக்காமல் <br />வந்துவிட்ட இவள்<br />காலியாய் இருந்த பேருந்து<br />ஆழ்ந்து யோசிக்கிறேன்<br />ஒரு அவமானம்<br />ஒரேயொரு ஏமாற்றம்<br />வன்சொல்<br />சாலை கடக்கையில் குறுக்கிட்ட<br />லாரிக்காரன் கூட<br />சாவுகிராக்கியெனவில்லை இன்று <br />இது ஒரு நாளா// <br /><br />இப்படி எதுவுமே நிகழவில்லை என்று சொல்லிவிட்டு, //மன்னிக்கவும்/ இன்றைக்கு/ கவிதையேதுமில்லை/ உங்களை வெறுமனே அனுப்புகிறேன்// என்கிறார். கவிதை எழுதுவதற்கு ஏதாவது ஏடாகூடமாக நிகழ்ந்தாக வேண்டும் என்கிற கோமாளித்தனத்துக்கு ஒரு நக்கல் எதிர்வினையாக இது எனக்குப் படுகிறது., இயல்பான நேர்முறையான நிகழ்வே கவிதை என்றும் சுட்டுவதாக. <br /><br />இப்படி யாத்ராவின் கவிதைகள் அத்தனையும், தமக்கென்று தேர்ந்துகொண்ட சொற்களால், பல்பொருட் தன்மை கூடியனவாக இருக்கின்றன. இது காரணம் இவை நிதானமாக வாசித்து உள்ளுணர வேண்டியவையாகவும் இருக்கின்றன. வலைத்தளத்தில் இந்தக் கவிதைகள் வாசிக்கக் கிடைக்கலாம். ஆனால் அவற்றைத் தேடிப்பிடித்து வாசிக்கிற மனநிலையும் சந்தர்ப்பமும் நமக்கு எண்ணியமட்டில் வந்துகூடி அமைவதில்லை. இப்படிப் புத்தகவடிவில் கிட்டுகையில், ஒரு நற்காலி அல்லது ஒரு தலையணையின் ஓய்வுப் பொழுதில் வாசிக்க முடிகிறது. இதற்காக இவற்றைப் புத்தகம் ஆக்கித் தந்த அகநாழிகைப் பதிப்பகத்தாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.<br /><br />இனி நான் தொடங்கிய இடத்துக்கு வருகிறேன்: <br /><br />//நினைவு பொல்லாதது//<br /><br />//உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில் <br />தொடர்ந்த தோல்வி, இயலாமை, கழிவிரக்கம்//<br /><br />எனது ‘முகவீதி’ தொகுப்பில் ஒரு கவிதை இருக்கிறது. என் கல்யாணத்துக்கு முன்பு எழுதியது. என்னைக் கல்யாணம் செய்து, சிறிது காலம் வாழ்ந்து பிறகு என்னை உதற நேர்ந்த ஒரு கட்டத்தில் என் மனைவி, “நீங்கள் எழுதிய இந்தக் கவிதை எவ்வளவு சத்தியமாது!” என்று அதிலிருந்து சில வரிகளை ஞாபகப் படுத்திச் சொன்னாள்.<br /><br />//பூத்த போது அடடா அழகு என்றேன்<br />காய்த்தபோது காலில் குத்தியது நெருஞ்சி<br /><br />என்ன தந்தாய் நீ எனக்கு<br />சில நரைமுடிகளைத் தவிர?<br /><br />இருக்கிறதா இன்னும் நினைவுகளில் ஈரம்? <br /><br />மறப்பதற்கில்லை <br />நெருஞ்சிப் பரப்பின் மஞ்சள் வசீகரம்// <br /><br />நான் கெட்டழிந்த கதை ‘தமிழினி’ வெளியீடாக வரும் எனது ‘நாடோடித் தடம்’ என்னும் நூலைப் பிறப்பித்தவள் இவள் என்று என் ஒரு காலத்திய மனைவியை, அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறேன். <br /><br />யாத்ராவின் கவிதைகள் நெடுகிலும் ‘இவள்’ என்றொரு குணவார்ப்பு வருகிறது. அந்த ‘இவள்’ இல்லையென்றால் இத்துணை செறிவான கவிதைகளை இவர் எழுதி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அந்த ‘இவள்’ நமக்குள் ஒரு க்ரியாசக்தியாக மாறி நின்று செயல்படவே தன்னைக் காவு கொடுத்தாள் என்றும் நம்புகிறேன். <br /><br />‘உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதற்கு’ அந்த இவளுடைய இருப்பு இன்றியமையாதது அல்லவா? <br /><br />//நேசிக்கப் படுகிறேன்<br />மூடநம்பிக்கை//<br /><br />என்றோர் இரு வரிக் கவிதையும் இந் நூலில் உண்டல்லவா? அது எவ்வளவு சத்தியமானது! ‘நேசிக்கிறேன்’ என்றால், அது நம்மைச் சார்ந்தது; நம் அறிவுக்குப் படுவது. ‘நேசிக்கப் படுகிறேன்’ என்றால் அது நம்பிக்கைதானே? மூடநம்பிக்கை என்றும் கொள்ளலாம். அப்படி, மூடநம்பிக்கை இருந்தால்தானே முக்தியை அடைய முடியும்? முக்தி என்பது பின் எதிலிருந்து?<br /><br />இந்த உள்வெளியற்ற நானை நிமாணிப்பதற்கு, ஓரிடத்தில், யாத்ராவே விடை கண்டுபிடித்துத் தந்திருக்கிறார்: <br /><br />//இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சாகடித்தேன் <br />அந்த நாயை// <br /><br />//இருசக்கர வாகனத்தால் ஏறி// அல்ல, //இரு சக்கர வாகனத்தில் ஏற்றி//! அன்பை விடத் துல்லியமான கொலைக் கருவி வேறு உண்டா? <br /><br />அன்பர்களே, ‘இரு சக்கர வாகனம்’ என்றால் என்ன? ‘நாய்’ என்றால் என்ன? ‘அனுமனவதாரம்’ என்றால் என்ன? ‘தாவணிப் பெண்’ என்றால் என்ன? ‘சிலுவை’ என்றால் என்ன? என்று நான் பேசிக்கொண்டே போக முடியும். இந்த உள்ளுறைகள் எல்லாம் வந்து வாய்க்கிற பொருத்தமான சொற்களைத் தேர்ந்து செய்யப்பட்ட கவிதைகள் இவை என்பது கிடக்க, ஒரு கவிதையில் வரும் வரிகளை எந்த இடத்தில் முடிக்க வேண்டும் என்னும் கலை அறியவும் இந்த நூலை வாங்கிக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று பரிந்துரைக்கிறேன்.<br /><br /><br />- ராஜசுந்தரராஜன்<br /><br /><br />ரொம்ப நன்றி சார்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-21970209007883295122010-12-23T01:49:00.000-08:002010-12-23T02:03:21.543-08:00புத்தகவெளியீட்டு விழா அழைப்பிதழ்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLocy3t2RS3FCOSyi9qsE6P4PkcZNCnLwlVQWGfuYNm5TjqRkjOrRSn7RJL9CC-AfBzfO3yJ93Vr6mhC83YEdIF7pqRfbMXJrptMIGhfkcbWBcZwzAbwA8FgyHGC1rmPiqvnsryMaQhRnv/s1600/yathra+invitation.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 275px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLocy3t2RS3FCOSyi9qsE6P4PkcZNCnLwlVQWGfuYNm5TjqRkjOrRSn7RJL9CC-AfBzfO3yJ93Vr6mhC83YEdIF7pqRfbMXJrptMIGhfkcbWBcZwzAbwA8FgyHGC1rmPiqvnsryMaQhRnv/s320/yathra+invitation.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553815896951570642" /></a><br /><br /><br /><span style="font-weight:bold;">ப்ரியத்திற்குரிய நண்பர்களுக்கு,</span><br /><br /> வணக்கம், பிப்ரவரி 2009 முதல் இந்த வலைப்பூவில் எழுதத்துவங்கி இன்றுவரையிலான நிகழ்வுகள் அவற்றின் நினைவுகள் என எல்லாம் எல்லாம் மனதடைத்திருக்கிறது இப்போது, எவ்வளவோ நினைவுகள், துவத்திலிருந்தே இணைய நண்பகளின் உற்சாகமும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் விமர்சனங்களும் வழிகாட்டுதல்களும் தான் இதை சாத்தியப் படுத்தியிருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியையும் ப்ரியங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த நெகிழ்வாக உணர்கிறேன். <br /><br /> இக்கவிதைகளை எழுதிய தருணத்தில் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டு அறிமுகப்படுத்தி வாழ்த்தி உற்சாகப்படுத்திய இணைய நண்பர்களுக்கும், வெளியிட்ட உயிரோசை மற்றும் சிக்கிமுக்கி இணைய இதழ்களுக்கும், நவீனவிருட்சம், மணல்வீடு, அகநாழிகை சிற்றிதழ்களுக்கும், பரிசளித்து மகிழ்வூட்டிய உரையாடல் இலக்கிய அமைப்பிற்கும் மிக்க நன்றி. <br /><br /> இந்த தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்து மிகச்சிறப்பாக பதிப்பித்திருக்கும் அகநாழிகை பதிப்பகம், அன்பிற்குரிய பொன்.வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் என் அன்பும் நன்றியும்.<br /> <br /> இவ்வெளியீட்டு விழா அறிவிப்பை தங்கள் தளங்களில் மற்றும் கூகுள் பஸ்களில் வெளியிட்டு வாழ்த்தும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. <br /><br /> நிகழ்விற்கு சிறப்புரை வழங்கி வெளியிட சம்மதித்த திரு. ராஜசுந்தரராஜன் மற்றும் திரு. ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்களுக்கும் மிக்க நன்றி.<br /><br /> வருகிற புதன்கிழமை 29 டிசம்பர் 2010 அன்று சென்னை கே.கே.நகர், முனுசாமிசாலை, டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இப்புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.<br /><br />நன்றி.யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-3368485501094365362010-07-31T05:55:00.000-07:002010-07-31T05:58:19.316-07:00எப்டியிருக்கீங்கமணவாழ்க்கை எப்டியிருக்கு<br />விஷேஷம் ஏதாவது<br />தம்பதி சமேதரா விருந்துக்கு வரணும்<br />வீட்ல எப்டியிருக்காங்க<br />ஆடிமாசம் கொலபட்னியா<br />புரிதல் எப்டியிருக்கு<br />புதுமாப்ள தொந்தரவு பண்ணாதீங்கப்பா போகட்டும்<br />குடிக்க்கூடாதுன்னு கன்டிஷனா<br />சிகரெட்டாவாது பிடிக்கலாமா<br />என்ன சொல்றாங்க வீட்டுக்காரம்மா<br />வீட்ல எங்க ஊருக்கா<br />பொண்டாட்டி கால் பண்றாங்களா<br />வீட்ல கூட்டிட்டு வரணும் கல்யாணத்துக்கு<br />புதுமாப்ள என்ன பண்றீங்க இந்த நேரத்துல சேட்ல<br />பொண்டாட்டி சமையலா<br />தலைதீபாவளி வாழ்த்துகள்<br />போன்ற இன்னபிற தருணங்களை கேள்விகளை<br />புன்னகையோடு கடந்துவிடுகிறேன்<br />நிலைக்கண்ணாடி சட்டக விளிம்பிலிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள்<br />விழுந்த புத்தகமெடுக்க குனிய கட்டிலுக்கடியில் சுவரோரம்<br />சுருண்டிருக்கும் நீண்ட ஒற்றைமுடி<br />ஜன்னல் விளிம்பிலிருக்கும் ஏர்பின்கள்<br />முந்தானை மடிப்பு குத்தப்பட்ட அரைஞான் கயிறிலிருக்கும் சேப்டிபின்<br />பீரோவில் சட்டைகளுக்கிடையில் விடுபட்டுப்போன உள்ளாடை<br />ஆர்எம்கேவியில் எடுத்த பட்டு வேட்டி சட்டை<br />கறை படிந்த உள்ளாடை வேட்டி<br />சுகித்த மெத்தை சீதனங்கள்<br />மோதிரம் அணிந்திருந்த மெட்டி<br />நலங்குமஞ்சள் பூசியிருந்தபடி<br />வரவேற்பறையில் நின்றபடி<br />நண்பர்கள் உறவினர்களோடு நின்றபடி கைகோர்த்து திரும்பிப்பார்த்தபடி<br />என் காதலிகளுடன் நின்றபடி<br />அவள் காதலர்களுடன் நின்றபடி<br />முதுகுகளில் சாய்ந்தபடி <br />உணவுமேசையில் ஊட்டியபடி<br />மெட்டியணிவித்தபடி மாலைமாற்றியபடி<br />மாங்கல்ய முடிச்சிட்டபடி தலைசுற்றி திலகமிட்டபடி<br />யாரையோ பார்த்து சிரித்தபடி தோளில் சாய்ந்தபடி<br />நெற்றிசரியுமவள் முன்கேசம் ஒதுக்கியபடி<br />கழுத்தில் கைகோர்த்தபடி<br />பரிசுப்பொருட்களை பெற்றபடி<br />யாகநெருப்புக்கு நெய்வார்த்தபடி<br />குட்டிப்பிள்ளையாரை தொட்டிலாட்டியபடி<br />பாதபூசை செய்தபடி பொறிமோதிரம் அணிவித்தபடி<br />நீர்க்குடத்தில் மோதிரம் துழாவியபடியிருக்கும்<br />இறந்த கணங்களின் பிணக்குவியலான ஆல்பம்<br />சங்கத்தில் பாடாத கவிதை ஆயிரம் மலர்களே மலருங்கள்<br />ராஜாமகள் ரோஜாமலர் கோடைகாலகாற்றே குளிர் தென்றல் பாடும்பாட்டே<br />ராஜராஜசோழன் நான் என் இனிய பொன்நிலாவே<br />பூவண்ணம் போலநெஞ்சம் ஓ வசந்தராஜா தேன்சுமந்த ரோஜா<br />உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை<br />பொத்திவச்ச மல்லிகமொட்டு ஆயிரம் தாமரை மொட்டுக்களே<br />அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்<br />ஆனந்த ராகம் கேட்கும்காலம் கீழ்வானிலே<br />அழகிய கண்ணே உறவுகள் நீயே<br />அழகே அழகு தேவதை ஆயிரம் பாவலர்<br />கொடியிலே மல்லிகப்பூ ஆத்தாடி பாவாட காத்தாட<br />மதுர மரிக்கொழுந்து வாசம் மேகங்கருக்கையிலே தேகங்குளிருதடி<br />காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ <br />அடியே மனம் நில்லுனா நிக்காதடி<br />புத்தம்புது காலை பொன்னிறவேளை<br />பூங்காவியம் பேசும் ஓவியம்<br />பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்<br />சோளம் வெதக்கயிலே சொல்லிப்புட்டு போன புள்ளே<br />தம்தனதம்தன தாளம் வரும் புதுராகம் வரும்<br />தேவதை போலொரு பெண்ணிங்கு வந்த்து நம்பி<br />மெட்டியொலி காத்தோடு என் நெஞ்சை தாலாட்ட<br />உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பிவந்தேன்<br />உறவெனும் புதியவானில் பறந்ததே இதய மோகம்<br />வெள்ளிக்கொலுசுமணி வேலான கண்ணுமணி<br />சிறுபொன்மணியசையும் அதில் தெறிக்கும் புதுஇசையும்<br />ஏ ராசாத்தி ரோசாப்பூ வாவா தேவதையே திருமகளே<br />பூங்கதவே தாழ்திறவாய் பூவாய் பெண்பாவாய்<br />ஒருகிளி உருகுது உரிமையில் ப்ழகுது ஓ மைனா மைனா<br />ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்துவர நெனக்கலயே<br />என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும்நேரம்<br />மணநிகழ்வின் காட்சிகளுக்கு பொருத்தமாய் கோர்க்கப்பட்ட<br />மூன்றுமணிநேர மூன்று குறுந்தகடுகளை<br />கணினியில் அலைபேசியில் சேமித்திருந்த நிழற்படங்கள்<br />அலைபேசியெண்ணை எண்களை<br />அவ்வப்போது தட்டுப்படும் அழைப்பிதழ்கள் வாழ்த்தட்டைகள்<br />பெயர் அச்சிடப்பட்ட மஞ்சள் பைகள்<br />போல்டரில் சேமித்திருந்த வாழ்த்து மின்னஞ்சல்கள்<br />தூர நண்பர்களுக்கு பகிர்ந்த பிகாசா புகைப்படங்கள்<br />சுவரில் அலமாரியில் மேசையில் டிவிமேல்<br />சமையலைறையில் உணவு மேசையில் இருந்த அன்பளிப்புகள்<br />அன்பளிப்பு விவரங்களடங்கிய நோட்டு<br />அழைப்பிதழ் கொடுக்க தயாரித்த பட்டியல்<br />மாமா எழுதி வைத்திருந்த பார்க்கச்சென்ற <br />முதல் நாள் டிராவல் செலவுமுதல்<br />சத்திரச்செலவு வரையிலான கணக்குடைரி<br />சகல தடயங்களையும் அப்புறப்படுத்தியாகிவிட்டது<br />இன்னும் இன்னும் எங்கெங்கிருந்தோ <br />முளைத்துக்கொண்டேயிருக்கின்றன அழிக்க அழிக்க சுவடுகள்<br />முதலில் சந்தித்த கோயில் நிச்சயம் மணம் நிகழ்ந்த மண்டபம்<br />அழைத்துச்சென்ற மருத்துவனை சினிமா தியேட்டர் <br />பூ வாங்கும் கடை ஒரேமுறை நேப்கின் வாங்கிய கடை<br />இருக்கும் வீதி சாலை வழி கவனமாக தவிர்க்கிறேன்<br />பின்னால் இருத்தி அழைத்துச்சென்ற இருசக்கரவாகனத்தை<br />கல்லாலடித்து உடைத்துவிட்டேன்<br />நின்ற அமர்ந்த இடம் கோலம் நடந்த தடம் சுமந்த<br />அனைத்தையும் நீங்கி வந்துவிட்டேன்<br />சாவதற்கும் சாமர்த்தியம்வேண்டும்<br />என்ன செய்வது <br />பரிமாறப்பட்ட வார்த்தைகள் பார்வைகள் புன்னகைகள் வசைகள் சம்பவங்கள்<br />பூச்சிகளாய் பறக்கும் மனதை<br />கூந்தல் கோதியிபடியிருந்த விரல்களை<br />தழுவிய கரங்களை அணைத்து புரண்டுருண்ட அங்கங்களை<br />சுவைத்த நாக்கை ஊர்ந்த உதடுகளை<br />புணர்ந்த குறியையாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-53548258022522562102010-06-17T23:22:00.000-07:002010-06-17T23:32:06.759-07:00அபி கவிதைகள்<span style="font-weight:bold;">உள்பாடு</span><br /><br /><br />இந்தப் பழக்கம்<br />விட்டுவிடு<br /><br />எங்காயினும்<br />வானிலேனும் மண்ணிலேனும்<br />புள்ளியொன்று கிடக்க்க் கண்டால்<br />சுற்றிச் சுற்றி<br />வட்டங்கள் வரைவதும்<br />சுழன்று சுழன்று<br />கோலங்கள் வரைவதும்<br /><br />குறுக்கும் நெடுக்குமாய்ப்<br />புள்ளியின் வழியே<br />பரபரத்துத் திரிவதும்------<br /><br />இந்தப் பழக்கம் விட்டுவிடு<br /><br />முடிந்தால்<br /> <br />புள்ளியைத் தொட்டுத்தடவி<br />அதன் முடிதிறந்து<br />உள்நுழைந்து<br /><br />விடு<br /><br /><br /><span style="font-weight:bold;">அதுதான் சரி</span><br /><br />எல்லாம் தெரிவதும்<br />ஏதும் அறியாததும்<br />ஒன்றேதானென்று<br />தெருவிலொரு பேச்சு<br />காதில் விழுந்த்து<br /><br />எதும் அறியாமல்<br />இருப்பதுவே சரி<br />என்று தோன்றிற்று<br /><br />இருந்தால்<br />இருப்பதை அறியாமல்<br />இருப்பது<br />எப்படி<br /><br />அதனால் <br />இல்லாதிருப்பதே<br />சரியென்று பட்டது<br /><br />இல்லாதிருந்தால்<br />ஒருவசதி<br />தெருப்பக்கம்<br />போகவேண்டியதில்லை<br />இல்லாதிருப்பதும்<br />இருப்பதும் ஒன்றே<br />என்றொரு பேச்சைக் <br />கேட்டுக் குழம்பும்<br />குழப்பம் இல்லை<br />‘<br /><br /><br /><span style="font-weight:bold;">அவர்</span><br /><br />கொஞ்சம் கொஞ்சமாக<br />விலகி<br />விலகலில் நீடித்தாயெனில்<br />நீ வாழ்கிறாய்<br />என்றார்<br /><br />முடிந்து போனதாய்ப் <br />போக்குக் காட்டும்<br />கணங்களில்<br />ஒட்டிக் கொண்டு சிதறினாய்<br />உன் சாவைச் சரிபார்த்துக் கொள் என்றார்<br /><br />பின்னும் <br />நீ இருப்பதாக உணர்வது வழக்கமெனில்<br />வாழ்க்கை<br />எட்டி நின்று உன்னை<br />முறைப்பதை<br />சாவின் சஞ்சலத்தை<br />ஒருபோதும் நீ காணப் போவதில்லை<br />என்றார்<br /><br />சொற்களின் கும்மாளத்திலும்<br />எண்ணங்களின் ஆடம்பரத்திலும்<br />உன் நிகழ் அனுபவம் <br />உயிர்ப்படங்கியது<br />அறியாய்<br /><br />அறியாய் மேலும்<br />நிகழ்வில் நின்றே<br />நிகழ்வினின்றும் விலகும்<br />நெறி எது என்பதை<br /><br />கூடவே நிகழ்ந்து வா<br />கொஞ்ச நேரத்தில் நீ<br />நிகழ்வுடன் அருகே<br />இணைகோட்டில் ஓடுவாய்<br /><br />ஆச்சரியமாகவே உன் இருத்தல்<br />உனைவிட்டு விலகி உன்னுடன்<br />ஓடிவரக் காண்பாய்<br /><br />என்றார்<br /><br />இன்னும் சொன்னார்<br /><br /><br /><span style="font-weight:bold;">கோடு</span><br /><br />கோடு வரைவதெனின்<br />சரி<br />வரைந்து கொள்<br /><br />இப்புறம் அப்புறம்<br />எதையேனும் ஒன்றை<br />எடுத்துக்கொள்<br /><br />எடுத்துக் கொள்ளாதது<br />எதிர்ப்புறம் என்பாய்<br /><br />இப்போதைக்கு<br />அப்படியே வைத்துக்கொள்<br /><br />முதலிலேயே <br />மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்<br /><br />மாறி மாறி<br />எதிர்ப்புறக் குழப்பம்<br /><br />இருபுறமும் உனது ?<br />இருபுறமும் எதிர்ப்புறம் ?<br /><br />எதுவும்<br />எவ்வாறும் <br />இல்லை என்று<br />சலிப்பாய்<br /><br />களைத்து உறங்கும் உலகம்<br /><br />ஆரம்பத்திலேயே <br />முடிவைத் தடவியெடுக்க<br />நின்றாய்<br /><br />இதுஎன்றோ அதுஎன்றோ<br />இரண்டும் இல்லையென்றோ<br />வருகிறது <br />உன்முடிவு<br /><br />அதனால்<br />கோடு வரைவதெனின்<br />வரைந்து கொள்<br /><br /><br /><br /><span style="font-weight:bold;">இடைவெளிகள்</span><br /><br />யாரும் கவனியாதிருந்தபோது<br />இடைவெளிகள்<br />விழித்துக்கொண்டு<br />விரிவடைந்தன<br /><br />நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்<br />அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்<br />உனக்கும் எனக்கும்<br />விநாடிக்கும் விநாடிக்கும்<br />இடைவெளிக்கும் இடைவெளிக்கும்.....<br />என்று<br /><br />இடைவெளிகள் விரிவடைந்தன<br /><br />வெறியூறி வியாபித்தன<br /><br />வியாபகத்தின் உச்சத்தில்<br />மற்றெல்லாம் சுருங்கிப்போயின<br /><br />ஆங்காங்கிருந்து<br />இடைவெளிகள் ஒருங்கு திரண்டு<br />அண்டவட்டமாயின<br /><br />வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும்<br />சிற்றெரும்புகளாய்<br />வாழ்க்கைக் துகள்<br /><br />வட்டத்தின் சுழற்சியில்<br />நடுவே தோன்றி வளர்ந்த்து<br />பேரொளி<br /><br />அதற்குப் பேச்சு வரவில்லை<br />சைகைகளும் இல்லை<br />எனினும் அதனிடம்<br />அடக்கமாய் வீற்றிருந்தது<br />நோக்கமற்று ஒரு<br />மகத்துவம்<br /><br /><br /><br /><span style="font-weight:bold;">எதன் முடிவிலும்</span><br /><br />நினைக்க நினைக்க<br />நா ஊறிற்று<br />பறிக்கப் போகையில்<br /><br />ஓ அதற்கே எவ்வளவு முயற்சி<br />இரண்டு சிறகுகள்<br />இங்கே கொண்டுவந்துவிட<br />யார்யாரோ கொடுத்த<br />கண்களைக் கொண்டு வழிதேடி<br />இடையிடையே காணாமல்போய்<br />என்னை நானே<br />கண்டுபிடித்துக் கொண்டு<br />கடைசியில்<br />மங்கலான ஒரு வழியில்<br />நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து<br />முண்டுமுண்டாய்ச்<br />சுளுக்கிக் கொண்டு நிற்கும்<br />அந்த மரத்தில் என்னை ஏற்றி<br />அதை பறிக்கச் செய்து<br /><br />ஏறிய நானும்<br />கீழ்நின்ற நானும்<br />நாவில் வைத்த போது<br />குடலைக் கசக்கும் கசப்பு<br /><br />கீழே எறிந்துவிட்டு<br />மறுபடி நினைத்தால்<br />நினைக்க நினைக்க<br />நா ஊறுகிறதுயாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-58457271535091927022010-06-10T04:31:00.000-07:002010-06-10T04:34:10.434-07:00உமா மகேஸ்வரி கவிதைகள்<span style="font-weight:bold;">பூக்காத செடிகள்</span><br /><br />ஏதாவது பேசு<br />துவைக்காத சட்டை, சுவைக்காத குழம்பு<br />இவற்றோடு இன்னும்<br />இலக்கியம் சினிமா என்றில்லாவிடினும்<br />இன்று கண்ட புதியமுகம், எதிர்பாராத<br />சம்பவம், வாகன நகர்த்தலில்<br />வடிவழகு கெடாத கோலம்<br />வந்து போன வியாபாரத் தந்திரம்<br />பூக்காத செடியின் யோசனை<br />புதிதான புத்தக வாசனை என்று<br />சொல்லேன் எதையாவது.<br />தினங்களின் கனத்தில்<br />நசுங்கிய ஞாபகங்களுக்கு<br />மூச்சு தா<br />ஜன்னல் வெளியின் பொன்தூசியையும்<br />நீர்க்கிண்ணத்திலாடும் நிலவையும்<br />அள்ள முனையும் எனை நோக்கி<br />முறுவல் செய்<br />அல்லது முட்டாளென்று சொல்<br />அடிவயிற்றுக் கருவின் அசைவை<br />அறிவிக்க உன் கை பற்றிப் பதிந்த போது<br />அவசரமாய் உதறிப் போனாயே<br />அதற்கு வருத்தம் தெரிவி உடனடியாக.<br />அவிர்த்து எறியுமுன்<br />புடவையடுக்குள் புதைந்த பூக்களையாவது<br />ரசித்துக் கவனி.<br />அடுத்த முறை எனை நீ<br />அழுத்தும் இரவுகளில்<br />வெளியிலசையும் தென்னையை<br />வெறிப்பதையாவது<br />விசாரி ஏன் என்று எப்போதாவது.<br /><br />•••••<br /><br />ஒன்றுமில்லை நான் தீர்ந்தேன்<br />கிடக்கட்டும் இந்த பிரச்சனைகள்<br />உறங்க வேண்டும் நான்<br />உரத்த பேச்சு<br />முடிவற்ற விவாதங்கள்<br />அலுத்த ஆலோசனைகள்<br />நைந்து விழுந்த இந்நாள்.<br />நடமாற்றங்களற்ற நதியொன்றின் கரையில்<br />என்னை இனியாவது<br />தனியாகத் தூங்கவிடு<br />வெல்வெட் மெத்தைகளில்<br />விரிகின்ற வலைகளில்<br />வியர்த்து சிறு பூச்சியானேன்.<br />பயணத்தின் திசை <br />தெரியப் பிரியமில்லை<br />இறப்பின் வரப்புகளில்<br />இன்றும் காத்தருந்த நம்பிக்கை<br />நகர்ந்து போவதை<br />நடுங்கிப் பார்க்கிறேன்.<br />கேள்விகளை சிக்கல்களை<br />தீராத குழப்பங்களைப்<br />பொட்டலமாக்கி<br />எடுத்துப் போ உன்னோடு.<br />நதிக்கரையில் புதர்மடியில்<br />நான்மட்டும் தனியாகத் <br />தூங்கவிடு.<br /><br />••••••••<br /><br />குழந்தைக்கால் நுனிகளென<br />ஆரம்ப மழைத்தடங்கள் என்<br />கார்த்திகைக் கோலத்தில்<br />நேர்த்தி தான் பார்ப்பதற்கு;<br />தீபங்களுக்குப் பதிலாக நீர்ச்சுடர்கள்<br />வலுத்துப் பெருத்ததில்<br />வர்ணப்பொடி கரைசல்<br />திரவ வானவில்லாக.<br />நின்றதும் மறுபடி வரைதல்.<br />முடித்துத் திரும்புமுன்<br />வெடித்துச் சாடும் மழையின் ஆக்கேராஷம்.<br />கனவின் சிதைவைக்<br />கண்ணுற்றேன் இம்முறை<br /><br />•••••••••••••<br /><br /><span style="font-weight:bold;">சொல்லாதது</span><br /><br />உரையாடல்களின் முற்றுப்புள்ளி<br />சுழன்று விரிகிறது வளைகிறது<br />சொல்லமற் போன ஏதோ ஒன்றின்<br />கேள்விக்குறியாக.<br />சொல்வதற்கான திட்டங்களோ<br />சொல்லாததற்குரிய சகஜமின்மையோ<br />இல்லை நம்மிடையே<br />இருந்தாலும்<br />இரைச்சல்கள் நெரிசல்களிடையே<br />நசுங்கி உப்பியபடியிருந்தது நாம்<br />பகிராத எதுவோ<br /><br />பிரிவில் கையசைத்த பின்பும்<br />தேடிக் கொள்கிறேன் என்னுள்<br />ஆடையில் ஒட்டிய உதிராத புல்லென<br />அது எதுவென்று<br /><br />•••••••••••••<br /><br />நேற்று என்னுடையதாக இல்லை<br />என் சிதறிய அழுகை<br />எனினும் ஆராய்ந்தேன்<br />வேகமான உரையாடல்களில்<br />வெடித்து ஒரு கீறல்<br />உருவாகும் விதம் குறித்து.<br />கண்ணாடியில் போலவோ<br />காய்ந்த நிலத்தில் போலவோ<br />உலர்ந்த நதியில் போலவோ........<br /><br />•••••••••••••<br /><br />மேகம் கருத்திருக்கிறது<br />மழை வருமென்று<br />சொல்லிவிட்டேன் தெரியாத்தனமாய்<br />குழந்தை கேட்கிறாள்<br />எப்போது மழை வரும் ?<br />அங்கே கிளம்பினால் <br />இங்கே வந்துவிடுமென்று<br />சமாளித்தேன். அடுத்த வினா<br />எப்போது அங்கே கிளம்பும் ?<br />‘வரும் போது வரட்டும்’ என<br />மழுப்பி நகர முனைகையில்<br />குறுக்கிடும் மற்றொன்று.<br />‘வரும் போது எப்போ வரும்’<br />‘வரும் பொழுது, வரும் போது<br />தானே வருமென்றால்<br />அவளுக்குப் புரியவில்லை.<br />ஒருவேளை எப்படியோ<br />புரிந்ததோ என்னவோ.<br />விளையாட்டெல்லாம் துறந்து,<br />வாசல் வரைவில் தேய்படும் கன்னத்தோடு,<br />வரும் பொழுதிற்காக அவள்<br />காத்துக்கிடப்பது<br />என்னை வருத்துகிறது ஏதோ மாதிரியாய்.<br />நானும் அவளோடு <br />நின்று காத்திருத்தலன்றி<br />தெரியவில்லை வழியொன்றும்.<br /><br />•••••••••••••••<br /><br />நம்<br />மழலை பதிந்த ஒலிநாடாக்கள்<br />அழிபடவேயில்லை<br />சிறுமிப் பிராயத்தின் கூடாரங்கள்<br />திறந்தேயிருக்கின்றன.<br />மரச்செப்புகளில் வேகிற சாதம்<br />ஆடுகுதிரையில் என் முதுகைக் <br />கட்டிக் கொண்டிருக்கும் நீ.<br />மரணச் சுவடுகளை அனுமதிக்காது<br />நம் குழந்தைமையின் வெளி<br />அழிவல்ல உன் இறப்பில் நேர்ந்தது<br />அணுகிவிடக் கூடியதான<br />சிறு தொலைவும் பிரிவும்<br /><br />••••••••••••••••••••<br /><br />ஏனித்தக் குருவியை<br />இன்னும் காணோம்<br />எனக்கு மகா செல்லம் அது<br />பழுப்புக் கலரில் அழுக்குக் குஞ்சு.<br />சின்ன இறக்கைகளில்<br />கறுப்புப்கோடு தெரியும்.<br />கண் மட்டும்<br />கண்ணாடிக்கல் மாதிரி<br />வெளிச்சத் துறுதுறுக்கும்.<br />உரிமையாய் கூடத்தின்<br />உள்ளே நுழைந்து நடக்கும்.<br />புத்தகம் ஒதுக்கி<br />அதையே கவனிக்கும் என்னை<br />அலட்சியப்படுத்தும்.<br />மாடி வெயிலில்<br />வேட்டியில் காயும்<br />வடகத்தை அலகால் நெம்புதல்,<br />தோல் உரிக்காது<br />நெல்லை விழுங்குதல்,<br />துணிக்கொடியில் கால் பற்றிக் <br />காற்று வாங்குதல்,<br />அறைக் கண்ணாடியில்<br />தன்னைத் தானே <br />கொத்திக் கொள்ளுதல்<br />அதற்குப் படித்தம்.<br />நான் இறைக்கும்<br />தானியமணிகளை<br />அழகு பார்த்துத் தின்னும்<br />ரசனாவாதி.<br />ஏனிந்தக் குருவியை<br />இன்னும் காணோம்<br />அதுவரும் மாலை<br />மெதுவாய் நகருதே<br />கீழ்வானப் பரப்பில்<br />கண் விசிறித் தேடினும்<br />காணவில்லை, எங்கு போச்சோ<br />திடுமெனக் காதில் <br />தித்தித்தது அதன் கீச்சுக்குரல்<br />ஜன்னல் பிளவில்<br />உன்னிப் பார்த்தால்<br />அடுத்த வீட்டு முற்றத்தில்<br />இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி<br />அழகு பார்க்கும் என் குருவி<br />என் முகம் ஏறிடாது<br />திரும்பிக் குனியும் விழிகளை<br /><br /><br />( வெறும் பொழுது - உமா மகேஸ்வரி <br />தமிழினி பதிப்பகம் )யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-41114644361319839842010-04-22T10:43:00.000-07:002010-04-22T10:48:35.367-07:00வி.அமலன் ஸ்டேன்லி கவிதைகள்<span style="font-weight:bold;">சுயம்</span><br /><br />கீறல் விழுந்த கைக்கடிகாரத்தின்<br />உள்முக மையத்தில்<br />கருக்கொண்டது முழுவட்ட<br />நீர்ப்படிவு<br /><br />இசைபட ஒழுகாது<br />வழுவிக்காட்டுகையில்<br />சூழ்ந்து தழுவிய அகாலம்<br /><br />பழுதென்று கொள்ளலாகாது<br />தனக்கென சுயமாக<br />நகரத் தொடங்கியுள்ளது<br />முள்<br /><br /><span style="font-weight:bold;">முழுமைத்துவம்</span><br /><br />மௌனத்தின் மத்தியில் நாம்<br /><br />மேசையில் கிடந்த்து<br />மொண்ணைப் பென்சில்<br /><br />உருட்டியுருட்டி<br />சிரத்தையுடன் சீவினேன்<br />கூரானது முனை<br /><br />மடியில் விழுந்த <br />செதுக்கல்களை ஊதிவிட்டு<br />மேம்போக்காக சிராய்த்தேன்<br />நுனியினை<br /><br />முடிந்த்தென்று வைத்துவிட<br />நீயெடுத்துச் சீவுகிறாய் <br />மென்மேலும்<br /><br /><span style="font-weight:bold;">பழையன கழிதல்</span><br /><br />எனக்கும் தெரியவில்லை<br />என்ன செய்வதென்று<br />நீ கூறலாம்<br />ஆனால் செய்யப்பிடிக்கவில்லை<br /><br />ஒருக்கால்<br />எனக்காக நீயே செய்தால்<br />பார்த்துக் கழிப்பேன்<br />அலாதியென<br /><br />அலுத்து விடுகையில்<br />புறக்கணித்துப் போ<br />வழியில் பிடித்த<br />வேறெவராயினும் வரக்கூடும்<br /><br />சொன்னதைச் சொல்லி<br />உன்னிடம் போல்<br />முதலிலிருந்து தொடங்குவேன்<br />நீ வந்துபோனதை மட்டும்<br />மறைத்துவிட்டு<br /><br />0<br /><br />பாடாதுபோன பட்சியை<br />குறையளக்காதீர்கள்<br />ஒருக்காலும் தன் சுரக்குறிப்புகளை<br />தவறவிட்டிருக்காது<br /><br />தொண்டைக்குழியில் முள்குத்தி<br />துன்புற்றிருக்கலாம்<br />மனநலம் சரியில்லாத<br />வாய்ப்புமுண்டு<br /><br />அவகாசம் உண்டென்றால்<br />உள்ளங்கைக்குள் பொருத்தி<br />மெல்ல வருடிக் கொடுங்கள்<br />அகப்படவில்லையெனில்<br />போன திக்கு நோக்கி<br />வலி தீரப் பிரார்த்தியுங்கள்<br /><br />நாளையோ மறுநாளோ <br />வராதுபோயின்<br />அக்கறையோடு தோட்டத்தில்<br />தேடுங்கள்<br />மிஞ்சிக்கிடக்கும் சிறகுகளையும்<br />சதையெடுத்துச் செல்லும்<br />எறும்புச் சாரைகளையும்<br /><br />0<br /><br />வாழ்தலுக்கிடையில்<br />அவ்வப்போது<br />இருத்தலை உறுதிபடுத்திக்கொள்ள<br /><br />சொற்ப நீர்த்தேங்கலின்<br />மேற்புறப்படலமென<br />மெய்சிலிர்த்துக்கொள்ள<br />வேண்டியுள்ளது வெறுங்காற்றுக்கு<br /><br />0<br /><br />நேற்றைக்கின்று அறையில்<br />கொஞ்சம்<br />கூடுதலான நேரம்<br />தங்கிப்போனது வெளிச்சம்<br /><br />நாளை இன்னும் அதிகம்<br />நீடிக்கக்கூடும்<br /><br />அவ்வப்போது<br />தவறவிட்டதைத் தேட<br />மேலும் அவகாசம் கிடைக்கும்<br /><br />முடியாமல் போனால்<br />எனக்கானதையாவது<br />தேடிக் கண்டெடுப்பேன்<br />அதற்குள்<br /><br />0<br /><br />ஒவ்வொரு கடற்கரை அமர்விலும்<br />ஒரு பள்ளம் உருவாகிறது<br /><br />யாருடைய பள்ளத்திலோ கைநுழைத்து<br />பேச்சுவாக்கில்<br />ஏதோவொரு பள்ளம் நிரம்புகிறது<br />இப்படியே தான் வழிநெடுகிலும்<br /><br />அறியாதொரு பள்ளம்<br />அனிச்சையாய் நிரவல்<br />பிறகு மீண்டுமொரு பள்ளம்<br /><br /><span style="font-weight:bold;">நிஜம்</span><br /><br />எட்ட பார்த்த நீராயில்லை<br />இறங்கி நின்றது<br /><br />இலை தழை புறந்தள்ளி<br />விலக்க முயன்ற நீராயில்லை<br />பருகச் சூழ்ந்த்து<br /><br />இளைப்பாறுகையில்<br />அள்ள முனைந்த நீராயில்லை<br />குடித்துத் தீர்த்த்து<br /><br /><br />0<br /><br />அந்த அறைக்குள் <br />தூங்கவே பயமாயிருக்கும்<br />யாராரோ உற்று நோக்கும்<br />பார்வையின் கலவரம்<br /><br />ஈரம் கசிந்து ஆங்காங்கே<br />சுண்ணாம்பு உதிரந்த சுவரில்<br />விரவித் தென்படும் உருவத்தோற்றங்கள்<br /><br />விளக்கணைக்க <br />இடம்பெயர்ந்து இருளோடு சூழும்<br />புதைபடிவ முகங்கள்<br /><br />ஒருநாள் வெள்ளையடிக்கப்பட்டது<br /><br />இப்போது தூக்கமில்லை<br />யாருமற்றுப் படுத்திருப்பதிலும்<br />பயமிருக்கத்தான் செய்கிறது<br /><br />சீக்கிரமே பழசாகட்டும்<br />சுவர்<br /><br /><span style="font-weight:bold;">தூரம்</span><br /><br />அன்பைப் பெருக்குகிறது<br />துயரங்களை ஆற்றிப்போகிறது<br />நிம்மதியைத் தருவிக்கிறது<br /><br />அப்படியின்றி<br />முற்றிலும் எதிர்மறையாகவும்<br />முரண்பட்டியங்குகிறது<br /><br />தூரமென்று ஒன்றுமில்லை<br />அது புலன்களின் விடுதலை<br />மறதியின் அனுகூலமுடையது<br /><br />ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளின்<br />இடைவெளி<br />ஒரே புள்ளியின் வேறுபட்ட பதிவு<br />கர்ப்பிணிக்கும் சிசுவுக்குமென<br />முகில் வழி நதிகளென<br /><br />மரங்களுக்கும் பறவைகளுக்கும்<br />மண்ணுக்கும் காற்றுக்குமென<br />காலதேசவர்த்தமானங்களின் உள்ளீடாக<br /><br />உனக்கும் எனக்குமன்றி<br />என்னிடமிருந்தே எனக்கும்<br /><br />(மேய்வதும் மேய்ப்பதும் யாது... என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள், தமிழனி பதிப்பகம்)யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-90781848312076144282010-03-29T12:09:00.000-07:002010-03-29T12:11:32.656-07:00நானும் அவனும்துயரத்தின் ரேகை படர்ந்து<br />முகம் துவண்டு<br />இன்னும் சற்றைக்கெல்லாம்<br />தளும்பிவிடும் விழிகளுடன்<br />என் முன்னால் <br />நிலைக்கண்ணாடியில் அமர்ந்திருந்தவனை<br />அப்படியே பார்த்திருந்தேன் சிலகணங்கள்<br />ஏனோ முத்தமிடத்தோன்றியது<br />அவன் கன்னத்தில்<br />இதழ்குவித்து <br />அவன் கன்னத்தை நெருங்க<br />அதற்குள் அவன் <br />உதடுகுவித்து முத்தமிட்டுவிட்டான்<br />என் உதடுகளில் <br />அல்லது<br />என் முத்தம் தான்<br />குறி தவறிவிட்டதாயாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-53159223698097543252010-02-21T22:28:00.000-08:002010-02-21T22:32:28.039-08:00ஊமைப் பிரியம்வீசியெறிய மனமின்றி<br />மீண்டும் மீண்டும்<br />ஓட்டுகிறாள்<br />பலநாள் நெற்றியிலிருந்த<br />அந்த ஸ்டிக்கர் பொட்டை<br /><br />தான் பாரமாயிருப்பதாய் எண்ணி<br />கூந்தல் சூடிய சரத்தினின்று<br />தன்னை உதிர்த்துக் கொள்ளும் <br />மலர்களைப் போல<br />உதிர்ந்து வீழ்கிறது<br />அந்தப் பொட்டு<br />ஒட்ட வைக்கப்படும்<br />ஒவ்வொரு முறையும்<br /><br />காலத்தால் பசை தீர்ந்த அதை<br />கைவிடுவதைத் தவிர<br />வேறு வழியிருக்கவில்லை <br /><br />அதன் இருப்பின் <br />வெள்ளைத்தடம் மறையாத<br />அந்த நெற்றியில்<br />வீற்றிருக்கிறது<br />மற்றொரு பொட்டு <br />தன் எதிர்காலத்தையுணராது<br /><br />வீட்டைக் கூட்டுகையில்<br />தட்டுப்பட்ட அதைப்பார்த்து<br />அப்படியே அமர<br />அவள் விழியோரத்திலிருந்து<br />ஒரு சொட்டு<br />நனைக்கிறது<br />அந்த உதிர்ந்த பொட்டையாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-55061100054728315642009-12-02T12:22:00.000-08:002011-02-15T00:45:00.098-08:00இருப்புநீர்த்திரை விழிகளுடன்<br />தூசு படிந்த நிழற்படத்தை<br />முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்<br />காய்ந்து உதிர்ந்த இலைச் <br />சருகுகளை விலக்கிப்<br />பார்க்கிறது காற்றுடன் மழை<br />கல்லறை எழுத்துக்களை<br /><br />நெடும்பயண ஓய்வாய்<br />சிலுவைக்கரங்களில் <br />வந்தமர்ந்த பறவை<br />தத்தியிறங்கி தானியமென <br />கொறிக்கிறது<br />கல்லறை எழுத்துக்களின்<br />ஒற்றுப்புள்ளிகளை<br /><br />தோற்றம் மறைவு என்ற<br />சொற்களுக்கிடையில்<br />கறுத்த அட்டைப்பூச்சி<br />மெல்ல ஊர்கிறது<br /><br />பெயரைப் போர்த்தியிருக்கும்<br />பறவையின் எச்சத்தைக் கழுவி<br />மனதோடு வாசிக்கிறது மேகம்<br /><br />திசையறியாது மிதந்த<br />ஒற்றையிறகு நனைந்து <br />ஒட்டுகிறது சிலுவை உச்சியில்<br /><br />பளிங்குச் சதுரங்க மேடையில் <br />மழைத்துளிகளின் <br />காய் நகர்த்தலுக்கெதிராக<br />கிளையிலை துளை வழி<br />சூது நிரம்பிய ஆட்டத்தை <br />ஆடிக்கொண்டிருக்கின்றன<br />சூர்யக் கிரணங்கள்<br /><br />மழைத்துளிகளும் ஒளிப்புள்ளிகளும<br />ஆடிச் சலித்துச் செல்ல<br />இருளின் மடியில் <br />தவழ்ந்திருக்கும் சமயம் வருகிறாள் <br />கைக்கும் வாய்க்கும் எட்டாமல்<br />நீலி நிலா<br />ஒற்றைமுலை குலுக்கி<br /><br />அதிகாலை<br />கல்லறை இடுப்பின்<br />தாழ்வாரத்தில்<br />மொக்கவிழ்ந்த குறியாய்<br />முளைத்திருக்கிறது காளான்<br /><br />( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com64tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-57830192294868609152009-11-30T09:36:00.000-08:002009-11-30T09:46:43.385-08:00மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா<a href="http://2.bp.blogspot.com/_Yg0o-qeCsNc/SxQE7P8DuGI/AAAAAAAAAIg/YNVG-9fscWM/s1600/IMG_1789.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_Yg0o-qeCsNc/SxQE7P8DuGI/AAAAAAAAAIg/YNVG-9fscWM/s320/IMG_1789.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5409954468316035170" /></a><br /><br /><br /><br /><strong>அழைப்பிதழ்</strong><br /><br /><strong>மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும்<br />மக்கள் கலை இலக்கிய விழா</strong><br /><br />நாள் :26 டிசம்பர் 2009<br /><br />சனிக்கிழமை பிற்பகல் 3.30மணி<br /><br />இடம்: ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,<br />மேட்டூர் வட்டம்<br />சேலம் மாவட்டம். 636453<br />தொடர்புக்கு :9894605371,9894812474,9677520060,9789779214<br /><br />பஸ்ரூட்: சேலம்-டூ-மேட்டூர்<br />பஸ் நிறுத்தம்: பொட்டனேரி<br /><br />தெருக்கூத்து ஒரு மகத்தான கலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்லாது ஒப்பற்ற நமது பண்பாட்டு அடையாளமாகும். மலிந்து பெருகி வரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, தோல்பாவை கட்ட பொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள பூர்வ கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் சமூகத்தின் கடைகோடியில் வாழ்ந்து வரும் மக்கள் கலைஞர்கள் மீள <br /><br />முடியாத வறுமையில் உழன்ற போதிலும் தம் உடல் பொருள் ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.<br /><br /> நம் சகோதரர்களை இனம் கண்டு பாராட்டுவதும், அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச் செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும் அங்ஙனமே மணல்வீடு சிற்றிதழும் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சி பட்டறையும் இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா கலைஞர் பெருமக்களுக்கான பாராட்டு விழாவாக அமைக்கப் பெற்றிருக்கிறது இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்போடு அழைக்கிறேன்.<br /><br /><strong>இப்படிக்கு,<br />மு.ஹரிகிருஷ்ணன்<br />ஆசிரியர், மணல்வீடு</strong><br /><br /> <br /> தலைமை : ச.தமிழ்ச்செல்வன்( மாநில பொதுச் செயலாளர், த.மு.எ.ச)<br /><br /> <br />முன்னிலை: ஆதவன் தீட்சண்யா(ஆசிரியர் புது விசை)<br /><br /> <br />சிறப்பு விருந்தினர்: எடிட்டர். பி. லெனின்.<br /><br /><br />நிகழ்ச்சித் தொகுப்பு: வெய்யில்,நறுமுகை. இராதாகிருஷ்ணன்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><strong>அமர்வு:1 மாலை 3.30-4.00மணிவரை</strong><br /><br /><br />களரிக் கூட்டுதல்: அம்மாபேட்டை சரஸ்வதி நாடக சபா.<br /><br /> வரவேற்புரை: தக்கை.வே.பாபு<br /><br /> துவக்கவுரை: பிரபஞ்சன்<br /><br /><br /><strong>அமர்வு.2 மாலை 4-6மணி வரை</strong><br /><br />கிராமிய தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தெருக்கூத்துச்செம்மல்<br />தோற்பாவைக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு, நிகழ்த்துக்கலைச் செம்மல்,கலைச்சுடர் விருது& பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்<br /><br /><strong>வாழ்த்துவோர்:</strong> <br /> <br />முனைவர் கே.ஏ. குணசேகரன்,முனைவர் மு.இராமசாமி<br />அம்பை,கிருஷாங்கினி,நாஞ்சில் நாடன்,பொ.வேல்சாமி,இமயம், ஹேமநாதன்(உதவி இயக்குநர் மண்டல கலை பண்பாட்டு மையம். சேலம்), பெருமாள் முருகன், புதிய மாதவி, பாமரன், லிங்கம்<br /><br /><br /> சிறப்புரை: எடிட்டர் பி.லெனின்<br /><br /> நிறைவுரை: ச.தமிழ்ச்செல்வன்<br /><br /> நன்றியுரை: மு.ஹரிகிருஷ்ணன்<br /><br />நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வ.சண்முகப்ரியன், இர.தனபால்<br /><br /> வரவேற்புக்குழு: லக்ஷ்மி சரவணக்குமார்,செல்வ புவியரசன்,கணேசகுமாரன்,அகச்சேரன்,ராஜா.<br /><br /><br />மாலை6மணி முதல் 7மணி வரை : உணவு இடை வேளை<br /><br /><br /><strong>அமர்வு3: மாலை7மணி</strong><br /><br />நல்ல தங்காள் (கட்ட பொம்மலாட்டம்)<br /><br />நிகழ்த்துவோர்: ஸ்ரீ இராம விலாஸ் நாடக சபாக்குழுவினர்,பெரிய சீரகாபாடி.<br />மிருதங்கம்:திருமதி.லதா<br />முகவீணை:திரு.செல்வம்(கண்டர் குல மாணிக்கம்)<br /><br /><br /> <br /><br /><br /><br /><strong>அமர்வு4- இரவு 10 மணி</strong><br /><br />மதுரை வீரன் (தெருக்கூத்து)<br /><br />நிகழ்த்துவோர்: எலிமேடு கலைமகள் நாடக சபா.<br />கோமாளி: மாதேஸ்<br />காசி ராஜன் :சண்முகம்<br />செண்பகவள்ளி:பழனிச்சாமி<br />சின்னான்:செல்லமுத்து<br />செல்லி:பிரகாஷ்<br />வீரன்:சதாசிவம்<br />பொம்மண்ண ராஜன்:வீராசாமி<br />வீர பொம்மன்:பெரிய ராஜு<br />பொம்மி:வடிவேல்<br />முகவீணை:குஞ்சு கண்ணு .செல்வம்.<br />மிருதங்கம்:வெங்கடாச்சலம், நடராஜன்<br />அரங்க நிர்வாகம்:சென்ன கிருஷ்ணன், வ. பார்த்திபன்.<br /><br />(இவ்விரு நிகழ்வுகளுக்கு மட்டும்(கட்ட பொம்மலாட்டம் , தெருக்கூத்து)<br />பார்வையாளர் நன்கொடை:ரூ.50<br /><br /><strong>நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,<br /><br />ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,<br /><br />611901517766, சண்முகப்பிரியன் என்ற ICICI வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.</strong>யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-16289042749266147612009-11-23T09:27:00.000-08:002009-11-23T09:45:35.616-08:00இக்கணம்தத்தளித்து <br />கால்துடுப்புகளசைத்து <br />கரையேற <br />எவ்வளவு முயற்சித்தும்<br />மூழ்கும் தருவாயிலிருக்கிறது<br />அத்தனை கால்களிருந்தும் <br />மரத்தினின்று<br />இடறி விழுந்த <br />கம்பளிப் பூச்சி<br />தான் மரண விளிம்பாகிவிட்ட<br />தவிப்பில் தன்னொரு உள்ளங்கையை<br />உதிர்த்தது அந்தக் கரையோரத்தரு<br />மழைத்துளிகள் குத்திப் புதையும் <br />புள்ளியினின்று <br />விரியும் வட்டங்கள்<br />ஒன்றையொன்று முத்தமிட்டு<br />மடிகின்றன<br />காற்றின் சுழிப்பில்<br />அவ்விலையைப் பூச்சி<br />பூச்சியை இலை<br />மாறி மாறி துரத்தியும்<br />எதிரெதிர்த் திசையில் <br />செல்ல நேர்ந்தும் என<br />தீராத அலைக்கழிப்பின் இறுதியில்<br />வெகு அருகில் <br />வீழ்ந்த மற்றொரு இலை<br />விளிம்பைப் பற்றி <br />ஏறியது பூச்சி<br />கரை<br />பரந்த நீர்வெளி தொடு வான்<br />இப்புறமிருக்கும் நீர்நடு தனிப்பாறை<br />என எல்லா திசைகளிலும்<br />சிறுசிறு தூரம் <br />சென்று சலித்துக் களைத்து<br />நிலைத்து தவழ்ந்து கொண்டிருக்கிறது<br />மென்னலைகளின் சீரான லயத்தில் <br />இலை மேல் ரயில்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-33855253385938249122009-11-09T08:37:00.000-08:002009-11-09T08:41:04.081-08:00இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்<strong>கதவு</strong><br /><br />திறக்கப்படாத கதவின் முன்<br />நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்<br />கதவின் பின்புறம் அவ்வப்போது<br />உறும்<br />பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்<br />அங்கு யாருமில்லை எனக்<br />கருதவிடாது பார்த்துக் கொள்கின்றன<br />அயர்விலும் ஆற்றாமையிலும்<br />திரும்பச் செல்ல<br />எத்தனிக்கும் கணந்தோறும்<br />கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று<br />உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது<br />திறக்கப்படாத கதவின் முன்<br />நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்<br /><br /><br /><strong>ஊழியம் & கம்பெனி (பி) லிமிடெட்</strong><br /><br />நீங்கள் ஒரு ஓவியர் என்பதை நன்கு அறிவோம் அதனாலேயே<br />சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை<br />வழங்கியிருக்கிறோம் உங்களுக்கு<br />அந்த இசைக் கலைஞரைப் பாருங்கள்<br />எவ்வளவு அமைதியாக மணியடித்துக் கொண்டிருக்கிறார்<br />ஏன் இப்படி உங்கள் கண்கள் கலங்கியிருக்கின்றன<br />நீங்கள் பயன்படுத்த வேண்டிய <br />சுண்ணமும் மட்டையும் காத்துக்கொண்டிருக்கின்றன<br />இப்போதே பணியைத் துவக்குங்கள்<br />இன்னும் சில தினங்களில் நமது ஆண்டு விழாவில்<br />கலந்து கொள்ள கடவுள் வர உள்ளார்<br />அதற்குள்ளாக அனைத்தும் தயாராக வேண்டும்<br />அதென்ன தூரிகையா<br />பணியிடத்திற்கு அதோடெல்லாம் வராதீர்கள்<br />நமது நிறுவனத்தின் விதிகளை அறிவீர்கள் தானே<br />பணிநேரத்தில் செல்பேசியை உபயோகிக்காதீர்கள்<br />சரி சீக்கிரம் வேலையைத் துவங்குங்கள்<br />கடவுளின் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்<br />பணிகளை மேறபார்வையிட.<br /><br /><br /><strong>முல்லா</strong><br /><br />கடிகாரங்களை விற்பதற்காக பாக்தாத்தின் கடைத்தெருக்களில்<br />நாள் முழுதும் சுற்றிக் கொண்டிருந்த முல்லா வீடு திரும்பிக் கொண்டிருந்தார் தன் ஒட்டகத்தில். எதிர்காலத்திற்குள் நுழையவே தெரியாத அந்தக் கடிகாரங்களை யாருமே வாங்கவே இல்லை வழக்கம் போல். சென்ற முறை பழங்களை மட்டுமே நறுக்கும கத்திகளைக் கொண்டு வந்த போதும் இப்படித்தான் நடந்தது. தாகத்தில் நா உலர பாலைவனத்தை அவர் கடந்து கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் அங்கு வந்த கடவுள் அவரை யாரெனக் கேட்டார். என் பெயர் முல்லா நஸ்ருதின் வாங்குவதற்கு யாரும் வராத பொருட்களைத் தயாரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றவன் என, புன்னகையோடு அவரின் கரங்களைப்பற்ற கடவுள் முனைந்தபோது, இந்தக் கரங்களை நான் பார்த்திருக்கிறேன் என்றார் முல்லா. எப்படியெனக் கடவுள் புருவமுயர்த்த, நான் நடந்து செல்லும் போது என் கால்களுக்கடியில் முள் வைத்துக்கொண்டே போகும் கரங்களை நன்கறிவேன் என்றார்.<br /><br /><br /><strong>மரப்பாச்சி</strong><br /><br />வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மையொன்று நெடுங்காலம் என் வீட்டிலிருந்தது. மிகுந்த காதலோடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். வாசனைத்திரவியங்கள் முகப்பூச்சு என என்னென்னவோ பூசியும் அதனிடமிருந்து இறுதிவரை அகலவில்லை வேம்பின் உலர்ந்த கசப்பு வாசனை. அதனிடம் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் மெல்லிய விம்மலோசை இரவுகளில் என் அறையெங்கும் வியாபிக்கிறது பேரிரைச்சலாக. அது என்னிடம் ஏதும் கேட்கவில்லை ஆயினும் அதற்கு தவறான உதவிகளையே செய்தேன் போலும். தன்னை இரண்டாகப் பிளக்கும் ஒரு கோடாரி அல்லது சாம்பலாய்த் தூளாக்கும் கொஞ்சம் நெருப்பு என எதையாவது பரிசளித்திருக்கலாம் நான். ஒரு நாள் அது திடீரெனக் காணாமல் போய்விட்டது. அதுமுதலாய் அதனை எல்லா இடத்திலும் தேடிவருகிறேன். அதனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கவேண்டும். அவ்வளவே. திடீரெனக் காணாமல் போவது எப்படியென.<br /><br />(காயசண்டிகை கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்)யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-68240329804276772462009-10-22T12:15:00.000-07:002009-10-22T12:17:28.090-07:00ராஜசுந்தரராஜன் கவிதைகள்*<br /><br />குற்றுயிரும் கொலையுருமாய்க் கிடந்த<br />ஒரு சிகரெட்டை<br />முற்றாகக் கொன்றவன் நான்<br />அதில் எனக்குக்<br />குற்றபோதம் இல்லை<br /><br /><br />*<br /><br />வான பரியந்தம் உயர்ந்த கோபுரத்தில் ஏறி<br />இல்லை என்று கைவிரித்து நிற்கிறது<br />சிலுவை<br /><br /><br />*<br /><br />மழை இல்லெ தண்ணி இல்லெ<br /><br />ஒரு திக்குல இருந்துங்<br />கடதாசி வரத்து இல்லெ <br /><br />அடைக்கலாங் குருவிக்குக் <br />கூடுகட்ட<br />என் வீடு சரிப்படலெ<br /><br />நான் ஒண்டியாத்தான் இருக்கேன்<br />இன்னும்<br /><br /><br />*<br /><br />கிறுக்குப்பிடித்த பெண்ணைக்<br />கர்ப்பவதியாக்க<br />எவன் மனம் துணிந்தது இப்படி<br />அதற்கு முன் இவளைப்<br />புஷ்பவதியாக்க <br />இறை மனம் துணிந்ததே எப்படி<br /><br /><br />*<br /><br />காக்கைகள் கொத்த<br />எறுமை நிற்கிறது இணங்கி<br />உண்ணிகள் காரணம்<br /><br /><br /><strong>சருகு</strong><br /><br />நழுவியது கிளையின் பிடி<br />விடுதலை.<br /><br />விடுபட்ட மறுகணம்<br />மாட்டிக்கொண்டதோ காற்றின் கையில்.<br />அலைக்கழிப்பு<br /><br /><strong>ஒரு குடிப் பிறந்தோம்</strong><br /><br />ஒரு கனி<br />ஒரு இலை<br />உதிர்ந்தன பழுத்து.<br /><br />மண்ணோடு கலந்த வழியில்<br />ஒன்று மரம்<br />ஒன்று உரம்.<br /><br /><br />*<br /><br />ஒரு சுடர்<br />ஒரு நிழல்<br />இல்லை தொல்லை<br /><br />இருள் போக்க வந்ததுகள் என்று<br />வழி நெடுக விளக்குகள்.<br />ஒன்றின்மீதோன்று புரண்டு<br />குழப்பித் தொலைக்குதுகள் நிழலுகள்.<br /><br /><br />*<br /><br />ஒரு பறவையிட்ட <br />எச்சத்தின் <br />நிழலில்<br />அயர்கிறோம் நானும் என் மந்தையும்<br />அது மரமாகி நிற்கிறபடியால்.<br /><br /><br />*<br /><br />பின்தங்கிப் போன என்னை<br />உன் இகழ்ச்சி – நகும் - பார்வையின்<br />கீழ் நிறுத்திக் காணவா<br />உச்சியை எட்டி ஓடினாய்.<br />நடந்தது இது தான்.<br />இடைவழியில், சிறுதொலைவு.<br />வண்ணத்துப்பூச்சிகளின் பின்னோடி<br />போட்டிப்போட மறந்துவிட்டேன்.<br /><br /><br /><br />*<br /><br />அப்படி ஒரு நிலைமை<br />வரும் என்றால் அக்கணமே<br />வாழோம் என்றிருந்தோம்<br /><br />வந்தது.<br />அப்படியும் வாழ்கிறோம்.<br /><br />நம்மோடு நாம் காண<br />இத்தென்னைகள்<br />தம் மேனி வடுக்கள் தாங்கி.<br /><br /><br />*<br /><br />கண்டெடுத்தோம்<br />அப்படியும் கவலைப்படுகிறோம்<br />அய்யோ யார் தொலைத்தாரோ என்று.<br /><br /> <br />( முகவீதி கவிதைத்தொகுப்பு, தமிழினி பதிப்பகம் )யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-30722909148047082802009-10-15T03:30:00.000-07:002009-10-15T03:35:29.411-07:00எம் . யுவன் (யுவன் சந்திரசேகர்) கவிதைகள்<span class=""></span><br /><strong>பங்களிப்பு<br /></strong><br />இந்த வரியை<br />நான் எழுதும்போது<br />கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.<br />கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.<br />சில பேர் சத்தியத்துக்காக<br />சிலபேர் காரணமறியாமல்.<br />கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.<br />சிலபேர் சாவதற்காக<br />சிலபேர் கொல்லப்படுவதற்காக.<br />மீதிப்பேர் இடைவெளியை<br />நிரப்பவென்று ஏதேதேதோ<br />செய்து விட்டார்கள்<br />ஒருவருமே கவனிக்காது<br />கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு<br />என்னுடைய பங்களிப்பாய்<br />ஒரு பதினாறு வரிகள்.<br /><br /><br /><strong>விலாசம்<br /></strong><br />தீர்மானத்தின் ஆணிகள்<br />அறையப்படாத சவப்பெட்டி<br />என்று என் கபாலத்தைச்<br />சொல்லலாம் நீங்கள்.<br />ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி<br />மொழியின் புதைமணலில்<br />கழுத்திறுக மூழ்கும்<br />முட்டாள் ஜென்மம் என்றும்.<br />இரவின் வைரம் விடிந்<br />ததும் காக்காப்பொன்னாக<br />மறுகும் லோபியாய்<br />தூண்டிமுள்ளில் மாட்டி<br />கூடைக்குச் சேரும் மடமீனென்று.<br />நழுவிப்போகும்<br />கணத்தின் சிலிர்ப்பை<br />ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்<br />வீணைத்தந்தி என்று.<br />அல்லது<br />இரா.சு.குப்புசாமி,<br />23 செக்கடித்தெரு,<br />மேலகரம்,<br />காறையூர் (வழி)<br />என்று.<br /><br /><br /><strong>கொண்டுவந்த கடல்</strong><br /><br />இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்<br />சென்ற முறை சிப்பி.<br />அதற்கு முன்னால் சோழி<br />பாலிதீன் பைகளில்<br />செதில் கலந்த மணலும்,<br />கரைக்கோயில் குங்குமமும்<br />கொண்டு வந்ததுண்டு.<br />ஒரு முறைகூட<br />கடலின் பரிதவிப்பை<br />பரிவை ஆறுதலை<br />கொண்டு வர முடிந்ததில்லை.<br />சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு<br />பாதியாகிச்<br />செத்துக் கிடக்கிறது அலமாரியில்.<br /><br /><br /><strong>தொலைந்தது எது</strong><br /><br />தொலைந்தது எதுவென்றே<br />தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.<br />தொலைந்ததின் ரூபம்<br />நிறம் மனம் எதுவும்<br />ஞாபகமில்லை.<br />மழையில் நனைந்த பறவையின்<br />ஈரச்சிறகாய் உதறித் துடிக்கும்<br />மனதுக்கு<br />தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.<br />எனக்கோ பயமாயிருக்கிறது<br />தேடியது கிடைத்தபின்னும்<br />கிடைத்தது அறியாமல்<br />தேடித் தொலைப்பேனோ என்று.<br /><br />( முதல் 74 கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம் )யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-59898710584248815662009-10-13T09:50:00.000-07:002009-10-13T09:53:09.369-07:00ஆனந்த் கவிதைகள்•<br /><br />அந்த நாள்<br />எனக்கு நன்றாக<br />நினைவில் இருக்கிறது<br /><br />அன்று என்ன<br />நடந்தது என்பதுதான்<br />ஞாபகமில்லை<br /><br /><br />•<br /><br />மாடிப்படியில்<br />ஏறிக்கொண்டும்<br />இறங்கிக்கொண்டும்<br />இருக்கிறார்கள் அனைவரும்<br /><br />ஏறிக்கொண்டும்<br />இறங்கிக் கொண்டும்<br />இருக்கிறது மாடிப்படி<br /><br />•<br /><br /><strong>படுகை</strong><br /><br />பறக்கும் பறவையில்<br />பறக்காமல் இருப்பது<br />எது<br /><br />ஓடும் ரயிலில்<br />ஓடாது நிற்கிறது<br />ஜன்னல்<br /><br />எங்கும் போகாமல்<br />எங்கும் போய்க் கொண்டிருக்கிறது<br />சாலை<br /><br />எப்போதும் போய்க் கொண்டே<br />எங்கேயும் போகாமல் இருக்கும்<br />நதி<br />எங்கும் போகாமல் இருக்கும்<br />படுகையின்மேல்<br />எப்போதும் போய்க் கொண்டிருக்கிறது<br /><br />•<br /><br />சுவருக்கு வெளியில் இருந்து<br />சுவர்களைப் பார்த்து இருந்தேன்<br />உள்ளும் புறமும் தெரிந்தது<br /><br />பின் சுவரானேன்<br />உள்ளும் புறமும்<br />ஒன்றெனத் தெரிந்தது<br /><br />இப்போது<br />சுவருக்குள் என்ன இருக்கிறது<br />என்பதைத்தான்<br />பார்க்கவேண்டும்<br /><br />சுவர் தன்னைப் பார்க்கும்போது<br />சுவர் இல்லாமல் போகிறது<br /><br />( அளவில்லா மலர் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம். இவரும் தேவதச்சனும் இணைந்து அவரவர் கைமணல் எனும் தங்கள் முதல் கவிதைத் தொகுதியை கொண்டுவந்தார்கள் என அறிகிறேன். )யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-7814625755875047542009-10-06T12:54:00.000-07:002009-10-06T13:02:36.256-07:00கொஞ்சம் திரும்பிப்பார்க்கிறேன்<span class=""></span><br /><span class=""></span><br />இப்பதிவை எழுத அழைத்த நண்பர் நர்சிம் அவர்களுக்கு நன்றி.<br /><br /><span class=""> திரும்பிப்பார்த்தல்</span> எப்போதுமே லயிப்பான விஷயமாக இருந்தில்லை. காரணம் இப்படியான மகிழ்ச்சியான காலங்கள் தொலைந்து போயிற்றே என்ற விசாரம் ஒரு புறம், மனதைத் துகள்துகளாகச் சிதறடித்த துர்நிகழ்வுகள் மீட்டப்படும் போதான கணங்களின் தாங்கவியலாத அவஸ்தைகள் ஒரு புறம் என முத்தம் பெற்ற இடத்தை தடவிப்பார்த்துக் கொள்வதும் தழும்புகளை குத்திக் கிளறிப்பார்ப்பதுமான செய்கைகளை கவனத்தோடே தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். நிகழின் கணங்கள் மட்டும் அவ்வளவு உணக்கையான தட்பவெப்பத்தில் இருக்கிறதாயென்ன.<br /><br /><span class=""> எழுத்துக்கு</span> மனப்பதிவுகள் அவசியமாகிறது, அவற்றைத் துறந்து சுதந்திரமாகி விடத் துடிப்பவன் எழுதுவது, சுயசூன்யம் வைத்துக் கொள்வது போன்றதானது. அதைத் தவிர்த்துவிட எவ்வளவோ முயன்று தோற்றிருக்கிறேன். எழுத்தின் மூலமான, மனப்பதிவுகளை சேமிப்பதை அவற்றைப் பற்றியதான அபிப்ராயங்கள் உருவாக்கிக் கொள்வதை அவைகள் என்னை வதைக்க அனுமதிப்பதை சினத்தையும் வெறுப்பையும் ஏன் அன்பையும் நெகிழ்வையும் கூட தூண்டுவதை தவிர்த்து விட வேண்டுமென்பது என் கடந்த காலம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடமாக நினைத்திருந்தேன். எந்த தப்பித்தலுக்கான முயற்சியும் எந்த விடுதலையையும் வழங்கிவிடவில்லை என்பது வேறு விஷய்ம்<br /><br /><span class=""> ஒரு</span> வித வெறுமையை எனக்குள் சிருஷ்டித்துக் கொள்வதே பிரதான நோக்கமாயிருந்தது, இந்த வெறுமையைத் தான் நான் ஓயாது என் எழுத்துகள் மூலமாக அடைந்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். என் எல்லா பிணைப்புகளிலிருந்தும் சப்தமில்லாமல் உதிரும் இலைபோன்று என்னை துண்டித்துக் கொள்வதே என் சகல துயரத்திலிருந்துமான விடுதலையாக இருக்க முடியும் என்பது என் எண்ணமாயிருந்தது. என் இச்செயற்பாடுகளின் காரணமாக ஓஷோவும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் இருந்திருக்கிறார்கள் என்பதை இப்போது உணரமுடிகிறது. இந்த மனநிலை ஒரு பருவம், அடுத்த பருவம் இதற்கு எதிர் நிலையிலிருக்கும். இப்படி ஒரு நிலைப்பாட்டிலும் அதற்கு எதிர்நிலையிலும் மாறி மாறி இருந்திருக்கிறது என் கடந்த பத்து வருடங்கள்.<br /><br /><span class=""> என்</span> நிலை ஒரு மாதிரி இரட்டைநிலை, நீரின் ஈர ஸ்பரிசத்திற்கும் ஆசை, கனமின்றி ஓட்டைக் குடமாகவும் இருக்க வேண்டும். இதை ஈடு செய்யும் வகையில் இலக்கியங்கள் இருந்தன. பத்து வருடங்கள் அவை என்னோடு கூடவே நான் அவைகளோடு கூடவே இருந்து வந்திருக்கிறோம். இவை என் புறவுலகின் பற்றற்ற தன்மைக்கும் அகத்தின் வெறுமைக்கும் அவ்வப்போது தீனியிட்டு வந்தன.<br /><br /><span class=""> கணினி</span> என்கிற தொழில் நுட்பம் 2006 வரை எனக்கு மிக அந்நியமாகவே இருந்து வந்திருக்கிறது. சுயமாக மின்னஞ்சல் கூட கிடையாது, முற்றிலும் பூஜ்யம். இப்போதும் ஏனென்று தெரியவில்லை பூஜ்ய நிலையின் மேல் தீராத காதல் இருந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி அந்த நிலையைத் தொட்டுவிட்டு வருவது எனக்கு பிடித்தமான செய்கையாக இருந்திருக்கிறது. பிறகான காலகட்டத்தில் பணியின் படிநிலைகளில் மேசையும் கணிணியுமாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பொழுதும் அதை முழுமையாக பயில முடியவில்லை. கழுத்தை நெறிக்கும் தேவையின் கரங்களை விலக்குமளவிற்கு கற்றுக் கொண்டேன்.<br /><br /><span class=""> பிறகு</span> இணையம் பரிச்சயமானது, கூகுளில் எதையெதையோ தேடித் தேடி தொலைந்து போனேன். ஒரு சுபயோக சுபதினத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருக்கையில் தமிழ் தட்டுப்பட இடறி விழுந்து எழுந்து நிற்க இலக்குகளற்ற யாத்ரீகனுக்கு திறக்கப்படும் மாயக்குகைகள் போன்று திறந்தன பிளாகுகள். பிளாக் என்கிற தளங்களை அவைகள் பிளாக் என்று தெரியாமலே வாசித்திருக்கிறேன், இப்போதைய என் நண்பர்களை அப்போதே புக்மார்க் செய்யத் தெரிந்துகொண்டு, செய்து தொடர்ச்சியாக வியந்து வாசித்துவந்தேன், உடனடி கருத்துப்பரிமாற்றங்கள் பரஸ்பர நட்புகள் சர்ச்சைகள் மோதல்கள் என பல தளங்களில் விரிந்திருந்தது பதிவுலகம்.<br /><br /><span class=""> இலக்கியப்</span> பிரதிகளோடு வலைப்பதிவுகள் வாசிப்பதும் வழமையாகிவிட்டது. அப்பொழுதும் பிளாக் பற்றிய எந்த நுட்பங்களும் அறிந்திருக்கவில்லை. பின்னூட்டமிடக்கூடத் தெரியாது. 2009 பிப்ரவரி வரை எனக்கு ஜிமெயில் முகவரி கூட கிடையாது. தம்பி மற்றும அவனுடைய ஒரு நண்பன் உதவியோடு ஜிமெயில் முகவரி துவங்கி, அப்போதே பிளாக் என்ற சொல்லைக் காணுற பிளாகும் துவங்கியாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஜன்னலையும் திறந்து பார்த்து தளத்தைக் கட்டமைத்தாகிவிட்டது. தமிழில் எப்படி தட்டச்சுவது, Google transliteration கிடைத்தது, ஆங்கிலத்தில் தட்டச்ச தமிழில் வந்தது, இப்படி எனக்கு மிகப்பிடித்த கவிதைகளை சில பதிவுகளாக இடத்துவங்கினேன்.<br /><br /><span class=""> அதுவரையில்</span> நான் வாசித்து வந்த தளங்களில் பின்னூட்டமிட கற்றுக்கொண்டுவிட்டேன். வண்ணதாசன் என் ஆதர்சம், வண்ணதாசன் எழுத்துகள் என ஒரு நான்கு பக்க அளவில் Google transliteration ல் தட்டச்சிய கட்டுரை காணாமல் போனது நொடியில் ஏதோ தொழில் நுட்பப் கோளாறு காரணமாக. அந்த ஒடிந்த மனநிலையில் அப்படி காணாமல்போனதையே நான்குவரிப்பதிவாக்கி பதிவிட்டேன். அப்போது தான் NHM writer உபயோகிக்கச் சொல்லி ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்களிடமிருந்து பின்னூட்டம் வந்தது. பிறகு அவ்வப்போது எழுத்துப்பிழைகளை சுட்டியும் தன் விமர்சனங்களை மென்மையாக தெரிவித்தபடியும் இருந்தார்.<br /><br /><span class=""> பிறகு</span> ஆதவா, ச முத்துவேல், அனுஜன்யா, மாதவராஜ், வடகரைவேலன் அண்ணாச்சி,,,,,,,, மற்றும பலர் தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டது மிகுந்த ஊக்கமளிப்பதாயிருந்தது. ஒரு நாள் மதியம் பதிவுப்பக்கம் வருகையில், என் சதுரங்கம் கவிதையை தன் வலைப்பப்பக்கத்தில் அறிமுகப்படுத்தி பதிவிட்டிருந்தார் ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்கள். அன்று அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.<br /><br /><span class=""> பிறகு</span> எவ்வளவு அன்புள்ளங்கள். அந்தப்பட்டியல் மிக நீளமானது. ஒரு கைக்குழந்தையைப் போல் அவர்கள் கரங்களில் வலம் வரத்துவங்கினேன். எவ்வளவு அன்பு, நட்புகள், நல்லிதயங்கள் என இவ்வருட பிப்ரவரி முதல் இது வரையிலான ஏழு மாதங்களிலான பயணம் மிக இனிமையானது.<br /><br /><span class=""> வலையுலகில்</span> முதலில் தொலைபேசியது ச.முத்துவேல் அவர்களிடம் தான், முதலில் பார்த்ததும் அவரையும் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களையும். பிறகு அநேகமாக எல்லோரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்பதிவுலகம் எனக்களித்திருக்கும் நட்பு வட்டத்தை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வெறுமையை தனிமையை உறவின் பிரிவின் வலியை வாழ்வின் அலைக்கழிப்பை என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டபோது இந்த நட்பு வட்டத்திடமிருந்து ஆறுதலாகப் பெற்ற சொற்களின் கதகதப்பு இன்னும் அப்படியே இருக்கிறது.<br /><br /><span class=""> தற்போது</span> எதுவும் எழுதுவதில்லையே என நண்பர்கள் கேட்பதுண்டு, தற்போதைய வேலைப்பளு காரணம் எனத் தோன்றினாலும் இன்னும் ஆழ்ந்து யோசிக்க ஒரு காரணம் தென்பட்டது. எனக்கு வருடமொருமுறை பருவகாலம் மாதிரி ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்துவிடும் (உண்மை நம்புங்கள்), அந்த பைத்தியநிலை சில மாதங்கள் நீடிக்கும், பிறகு இயல்பு நிலை திரும்பிவிடும். பிறகு குறிப்பிட்ட இடைவெளி விட்டு அடுத்த வருடத்தில் அந்தப் பருவம் திரும்பவரும். அந்தக் காலகட்டத்தில் வித்தியாசமான அந்நியமான செய்கைகளை செய்து வந்திருக்கிறேன். அப்படியான செய்கைகளில் எழுதுவதும் ஒன்று. <br /><br /><span class=""> கொஞ்சம்</span> என்று நிறையவே திரும்பிப்பார்த்துவிட்டேன். :)யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-90250428490816989582009-10-01T12:08:00.000-07:002009-10-01T12:20:12.993-07:00சங்கர ராம சுப்ரமணியன் கவிதைகள்<span class=""></span><br /><span class=""></span><br /><strong>சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை</strong><br /><br />தலைப்பிரட்டைகளை<br />மீன்களென்று எண்ணி<br />நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அள்ளி<br />சட்டைப்பையில்<br />நிரப்பிச்செல்லும் சிறுவர்கள் நீங்கள்<br />அவை<br />உங்கள் விருப்பப்படியே<br />உங்கள் தலைக்குள்ளும்<br />சில நாட்களுக்கு<br />அவரவர் வசதிக்கேற்ப<br />குப்பிகளிலும்<br />மீனென நீந்தும்.<br />மீன்களைப் பிடிப்பதற்கு தேவையான<br />தூண்டில்கள்<br />வலைகள்<br />காத்திருப்பின் இருள்<br />எதையுமே அறியாத சிறுவர்கள்<br />நீங்கள்.<br />தலைப்பிரட்டைகளை<br />சட்டைப்பைக்குள் நிரப்பி<br />எடுத்துச்செல்கிறீர்கள்.<br />உலகிற்கும்<br />காத்திருக்கும் உங்கள் அம்மாவிற்கும்<br />யாரும் எதிர்பார்த்திராத<br />அரிய உயிர்த்துடிப்புள்ள<br />பரிசை எடுத்துச்செல்வதில்<br />உங்கள் மனம் படபடக்கிறது<br />உங்கள் தோழி தேஜீவிடமும்<br />இந்தப் பரிசை<br />பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும்<br />நண்பர்களே<br />உங்களது இப்போதைய<br />சந்தோஷத்திற்கு<br />நான் ஒரு பெயர் இடப்போகிறேன்.<br />தலைப்பிரட்டை.<br /><br />•<br /><br />ஒரு இரையை<br />புதிரானதும், கரடுமுரடானதுமான இடங்களில்<br />எலி ஒன்று இழுத்துச் செல்வது போல்<br />கனவொன்று<br />நேற்றும் என்னை வழியெங்கும்<br />அழைத்துச் சென்றது.<br />என்னை பரிதவிக்க விட்டு<br />கொஞ்சம் கொஞ்சமாய்<br />அந்தக் கனவு கொறித்தது<br />மீதியாய் என்னை மதில்களிலிருந்து<br />தூக்கி எறிந்தது.<br />அபாயத்தில் அலறுவதும் பீதிக்குள்ளாவதுமாய்<br />வழியெங்கும் கனவின்<br />கொடூரப் பற்களிடையே<br />நடுங்கியபடி இருந்தேன்.<br />கனவில் எங்களைக் கண்டாயா என்று<br />நீங்கள் கேட்கிறீர்கள்<br />சற்று இளைப்பாறிவிட்டு<br />உங்களுக்கு நியாயமாகவே பதிலுரைக்கிறேன்.<br />நீங்கள் இல்லாமலா ?<br /><br /><strong>நித்தியவனம்</strong><br /><br />தெலைபேசியில் உள்ள எண்காட்டியில்<br />எண்கள் நடுங்குவதை<br />முதல் முறையாய் பார்க்கிறீர்களா.<br />உங்கள் அழைப்புமணியின் ரீங்காரம்<br />இதவரை செல்லாத நிலவுகளின்<br />சுவர்களுக்குள்<br />ஊடுருவுவதை உணர்கிறீர்களா.<br />நீங்கள் அழைக்கும் நபர்<br />சற்றுமுன் இறந்தவராய் இருக்கக்கூடும்.<br /><br />•<br /><br />இரவு காகமென அமர்ந்திருக்கிறது<br />உயிர்<br />ஒரு கொக்கின்<br />வெளிச்ச உடலுடன்<br />ஆஸ்பத்திரி காரிடாரில் நடந்து<br />வெளியேறியது.<br />கொக்கும் காகமும்<br />ஒரு நித்ய வனத்திற்குள்<br />ஜோடியாய் பறப்பதை<br />நீங்கள் பார்த்தீர்கள்<br />நான் பர்ததேன்.<br /><br /><br />( சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை, சந்தியா பதிப்பகம். முதலில் இவரின் காகங்கள் வந்த வெயில் தொகுப்பு தான் படிக்க கிடைத்தது, அது இவரின் பிற தொகுதிகளையும் தேடும் ஆர்வத்தைத் தூண்டியது, பிறகு அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள், தற்போது இந்தத் தொகுப்பும் வாசிக்க முடிந்தது. இவரின் முதல் தொகுப்பான மிதக்கும் இருக்கைகளின் நகரம் இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை. வாசகனை மிரட்டாத எளிய ஆற்றொழுக்கான உரைநடையில் கவித்துவ புனைவுகளாய் இக்கவிதைகள் நிறைவான வாசிப்பனுபவத்தையும் கவிதானுபவத்தையும் நல்குகிறது. )யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-59154285102700306812009-09-25T01:06:00.000-07:002009-09-25T01:13:35.881-07:00பாதசாரி கவிதைகள்<span class=""></span><br /><strong>ஈக்குஞ்சு<br /></strong><br />ஈக்குஞ்சு ஒன்று கண்டேன் ஆஹா...<br />என்னுயிரைப் பகலில்<br />கலகலப்பாக்கியதொரு ஈக்குஞ்சு தான்<br />எவ்வளவு அற்புதம்...<br /><br />இரவுகளில்கூட பெரிய ஈக்கள் மேலும்<br />வாஞ்சை வந்து விடுகிறது<br />‘குற்றமும் தண்டனையும்’ நாவலுக்குள<br />வந்து கண் மறைக்கையில்<br />வெளியில் எடுத்துவிடுவேன் பெரிய ஈயை –<br />முன்னொரு நாள் என் மூக்கின் மேல் சிந்தின<br />திருநீறை என்னவள் துடைத்த மென்மையாக.<br /><br />பகல் ஒரு குல்கந்து வியாபாரி<br />இரவே எனக்கு ரோஜாத்தோட்டம்.<br /><br />ஒரு சொம்பு சிறுவாணித் தண்ணீர்<br />ஒரு நண்பரின் கடிதம்<br /><br />ஹோட்டலில் காஃபியைத் தன் கையால்<br />ஆற்றி வைத்த ஒரு புதிய சர்வர்<br />தவிரவும் வேறென்ன<br />இன்று பகலில் ........<br /><br />ஆத்மார்த்தமாக செய்த செயல் என்னவோ<br />குண்டூசி கொண்டு<br />(என்) சீப்பில் அழுக்கெடுத்தது தான்.......<br /><br />ஒரு குழந்தையாய்<br />இரவில் என் மடிமீது<br />மலர்ந்து சிரிக்கும்<br />பால் மணம் மாறாத<br />என் டைரி.<br /><br /><br /><br /><strong>அழகான சாட்டை</strong><br /><br />என் இறுதி மூச்சாக நான் வெளியேறுமுன்<br />வந்து நிற்கிறாய் சிட்டுக்குருவியே<br />இதுவரை என்னிடம்<br />எதுவும் நீ எதிர்பார்த்ததில்லை<br />ஆனால் உன்னிடம் நான் தெரியத் தவறியது ஏராளம்<br />ஒரு பறவை இறப்பதற்கும்<br />ஒரு மனிதன் எனும் பெயரில் நான் இறப்பதற்கும்<br />உள்ள வித்தியாசமும் புரிகிறது இப்போது<br />புத்தகங்கள் மட்டுமே கூடி நிற்க இறப்பது<br />என்பது கூட வேதனையில்லை<br /><br />உன் பாடல்களில்<br />எவ்வளவோ கேட்டிருக்கலாம்<br />சுடரின் இறுதிப்புள்ளி இக்கணம்<br />பாமரக் கண்ணின் கடைசி அசைவில்<br />புலப்பட வேறு உயிர் காணேன் சுற்றிலும்<br /><br />கரெக்ட் டயம் பார்த்து தெரு இறங்கி<br />கடலை பொரிக்காரனிடம் கையேந்தும் வீட்டுநாய்<br />அடிக்கடி மரமேறி காக்கா முட்டை திருடும் அறைப்பூனை<br />புகைப்பட அப்பாவின் காலர் குடிக்கும் கறையான்கள்<br />புத்தகங்கள் புகுந்து அசிங்கப் படுத்திய கரப்பான்கள்<br />என் முன்னால் கூச்சமின்றிப் புணரும் பல்லிகள்<br />இரவில் உடலேறி இம்சிக்கும் பெண் கொசுக்கள்<br />ஒரு ஜீவனைக் காணவில்லை<br />நான் சொல்லிக் கொண்டு போக<br /><br />புருஷனுக்குத் தெரியாமல் பலதடவை பிணங்களுக்கு<br />கொஞ்சம் தலைக்கு வெண்ணையும்<br />காட்டுக்கு வறட்டியும்<br />இலவசமாகத் தந்த ஒரே அக்காவும் எங்கோ<br />தொலைவூரில் சாணி தட்டும் ஓசை கேட்கிறது<br /><br />நான் வெளியேறிய பின்னால்<br />சிலர் வரக்கூடும் மனித உடையில்<br />ஜென்மம் நீங்கின ஒரு கவிஞனைக் காண<br />இருதயம் நிற்கும் முன்பே இறந்து விட்ட மனிதர்களில்<br />நானும ஒருவன் என்பதெல்லாம்<br />நீ அறிந்தது தானே என் சிட்டே<br /><br />இனியொரு சிறு உதவி<br />உன் பாடல்களின் வழிகளிலெல்லாம்<br />இவ்விதயத்தின் கடைசி வரிகளையும் சேர்த்துப்பாடு<br /><br />மனித உடை தரித்த உயிர்களே<br />மன்னித்து விடுங்கள் ஒரு மனிதனை<br />இறுதிவரை அவனின் சாதனை<br />அழகான சாட்டை செய்ய முயன்றது தான்<br />அழகான சாட்டை. ஆமாம் அழகான............<br /><br /><strong>பேசும் வாழ்க்கை</strong><br /><br />அன்று சைக்கிளின் மீதிருந்து<br />அந்தப் புன்னகையின் கையுயர்த்தல்<br />நேற்று ஸ்கூட்டரிலிருந்து புன்னகையின் கையுயர்த்தல்<br />(நான் என்றும் காலத்தின் மீது நடையில்)<br /><br />இடையில் மாதக்கணக்கில்<br />இருவரும் சந்திக்காமல் ஆனாலும்<br />சந்திக்கும் நாளின் இதயத்திலிருந்து<br />அதே புன்னகையின் கையுயர்த்தல்<br /><br />சுமார் எட்டு வருடங்களாக<br />சந்திப்பு நேராத நாட்களில்<br />எங்களைக் குறித்து கிஞ்சித்தும் சிந்தனையே<br />எனக்கிருக்காது. அவருக்கும் அப்படித் தானிக்கும்<br /><br />அவர் எங்கோ பக்கத்தில் தான்<br />ஒரு கம்பெனியில் வேலை பார்க்கவேண்டும்<br />என்ன பேர் என்ன வேலை எங்கே வீடு தெரியாது<br />ஒரு வார்த்தை பேசிக்கொண்டதில்லை<br /><br />வீட்டுப் பூந்தொட்டியில் வெங்காயப் பயிரென்றான<br />இன்று –<br /><br />என் முகம் இறந்த தாய்<br />எனக்கு முகம் திருப்பும் தந்தை<br />எனக்கு முகம் மறுக்கும் உறவுகள்<br />என் முகம் புரியா நண்பர்கள்<br />இருந்தாலும்<br /><br />நேர்தலுக்கான திட்டமோ<br />நேர்தலுக்கான எதிர்பார்ப்போ<br />நேர்தலுக்கான ஏக்கமோ<br />இல்லாமல்<br />அந்த புன்னகையின் கையுயர்த்தல்<br />என்றேனும்<br />இவ்விதந்தான்<br />வாழ்க்கை முகங்கொடுத்து<br />என்னோடு பேசுவது.<br /><br />(பாதசாரியின் மீனுக்குள் கடல் தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை. இத்தொகுப்பு இரண்டு சிறுகதைகளும் சில கவிதைகளும உள்ளடக்கியது. தமிழினி வெளியீடு. இத்தொகுப்பிலுள்ள காசி சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பு சொல்லில் அடங்காது.)யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-69069172944446779262009-09-15T12:24:00.000-07:002009-09-15T12:39:49.425-07:00ரமேஷ் பிரேம் கவிதைகள்<ul><li>ஆழிப்பேரலை<br />ஊருக்குள் புகுந்தது<br />தொலைக்காட்சிப் பெட்டியருகே இருந்த<br />கண்ணாடித் தொட்டி மீன்களை<br />மீண்டும் கடலுக்குள் சேர்த்தது<br /><br />ஆழியின் ஆழ்படிவில்<br />பனிக்குடத்துக்குள்<br />நீந்திக் கொண்டிருக்கிறது<br />சிசு<br /></li></ul><p><span class=""></span></p><ul><li><span class="">எறும்புகளுக்கு</span><br />தற்கொலை செய்துகொள்ளத்<br />தெரிவதில்லை<br />எனக்குத தெரிந்த எறும்பொன்று<br />மூன்று முறை தோல்வி கண்டது<br />எதேச்சையாக ஒரு நாள்<br />என்னைக் கடித்தபோது<br />தன் இறுதி முடிவுக்கான வழியை<br />அறிந்து கொண்டது<br /></li></ul><p> </p><ul><li>இரவில் படுக்கப் போவதற்கு முன்<br />உறைக்கு ஊற்றிய பால் தயிராவதைக்<br />காலையில் கண்டதுண்டு<br /><br />இரவெலாம் கண்விழித்து<br />அது வேறொன்றாகத் திரியும்<br />கூத்தைக்<br />கண்டதுண்டோ நீ<br />கதைசொல்லி</li></ul><p><span class=""></span> </p><p></p><ul><li>காகம்<br />வழி தவறி விட்டது<br />மிடறு நீருக்காக<br />பாலை நிலப்பகுதியில் அலைந்தது<br /><br />பள்ளிவிட்டுச் செல்லும் குழந்தையின்<br />தோள் பையிலிருந்த கதைப்புத்தகத்துள்<br />ஒரு பானையையும்<br />அதிலுள்ள கையகல நீரையும் கண்டது<br />பரபரப்போடு கற்களைத் தேடியது<br />தாகத்தை மறந்து தானும் ஒரு கதையாவதற்கு<br /></li></ul><p></p><ul><li>புத்தகத்தின் மீது<br />வட்டமாக விழுகிறது<br />மேசை விளக்கின் ஒளி<br />வரிவரியாக நீளும்<br />எழுத்துக்களால் உருவாகும்<br />கதைகளுக்குள் நிகழ்ந்தபடியிருக்கும்<br />மனிதர்கள்<br />தனியொருவனை ஐந்தாறு பேர்<br />ஆயுதங்களோடு விரட்டுகிறார்கள்<br />என்னால் எதுவும் செய்ய முடியவில்லை<br />சமயோசிதமாக புத்தகத்தை மூடியிருந்தால்<br />என் முகத்தில் பட்டுத் தெறித்து வழியும்<br />கதகதக்கும் இக்குருதியை<br />தவிர்த்திருக்கலாம்<br />ஒருவேளை<br /></li></ul><p></p><ul><li>ஒவ்வொரு தீக்குச்சிகளாக உரசி<br />விரல்கள் சுடும் வரை எரியவிடுவது<br />சிறுவயதிலிருந்து பழக்கம்<br /><br />அபூர்வமாக சில சமயம்<br />எரியும் சுடரில்<br />யாரோ பார்ப்பது தெரியும்<br /><br />முகமற்ற பார்வை<br /></li></ul><p><br /></p><ul><li>நெருப்பு ஏன் சுடுகிறது<br /><br />சுடக்கூடாது என்று அதற்கு யாரும்<br />ஏன் சொல்லித் தரவில்லை<br /><br />கடல் உப்புக் கரிக்கிறது<br />மீன் ஏன் கரிப்பதில்லை<br /><br />தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்<br />சரி சாமி செய்வது தப்பில்லையா<br /><br />குழந்தைகள் பேசிப் பேசி<br />பெரியவர்கள் ஆகிறார்கள்<br /></li></ul><p></p><ul><li>கனவில் வந்த அப்பா<br />நான் அதிகமாகக் குடிப்பதாகக்<br />குறைபட்டுக்கொண்டார்<br />தனக்கு சாராயம் வைத்துப்<br />படையலிடாததையும்<br />நாசூக்காகச் சொல்லிவிட்டுப் போனார்<br /><br />( உப்பு கவிதைத் தொகுதியிலுள்ள கவிதைகள். உயிர்மை வெளியீடு )</li></ul>யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-76997157659759463142009-09-10T12:13:00.000-07:002009-09-10T12:45:22.391-07:00அப்பாஸ் கவிதைகள்<strong><span class=""></span></strong><br /><strong>கோடுகள்</strong><br /><br />நான் இல்லாத வேளை<br />நீ என்ன செய்து கொண்டிருந்தாய்<br />என் மகளே<br />வயலின் இசைத்துக் கொண்டு<br />தொலைபேசியில் உன் நண்பர்களோடு<br />அறையினுள்<br />அல்லது<br />உனது விரல்களில் வழியும்<br />வர்ணங்களின் கோடுகளோடு<br />அப்படியே தான்<br />நான் இல்லாத வேளையில்<br />என்ன செய்து கொண்டிருக்கிறாயோ<br />அதுவே அதுவே<br />உனது வேளை<br />என் மகளே.<br /><br /><strong>நண்பகல்<br /></strong><br />என்னைக் கேட்காமலேயே<br />எனது அறையினுள் வந்து விடுகிறது<br />சப்தமற்ற<br />இந்த நண்பகல்.<br />பின் மதிய வேளையில்<br />வெளியேறும் போதும்<br />என்னிடத்தில்<br />சொல்லிக் கொள்வதே இல்லை<br />கேட்காமலும் சொல்லிக் கொள்ளாமலும்<br />வரும் போகும்<br />நண்பகலைக் காண<br />நீயும் ஒரு முறை<br />வா<br />எனது மகளே.<br /><br /><br /><strong>வெளியே<br /></strong><br />ஒரே புழுக்கமாய் இருக்கிறது<br />என் மீது எதையும் ஏற்றாதே<br />உனது வார்த்தைகளும் போரடிக்கிறது<br />நகருக்கு வெளியே கூட்டிப் போ என்னை<br />சுவரில் சாய்த்து வைத்த<br />சைக்கிள் சொல்லிற்று<br />இப்போது அதை அழைத்து<br />வெளியே போய்க் கொண்டிருக்கிறேன்.<br /><br />( அப்பாஸ் அவர்களின் ஆறாவது பகல் என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை. அகம் வெளியீடு )யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-24572299033305860082009-09-09T11:25:00.000-07:002009-09-09T11:28:56.227-07:00வாமு கோமு கவிதை<strong>சாந்தாவின் புலம்பல் படலம் 1<br /></strong><br />லீவ் விட்டா ஐயா என்னை மறந்துடுவீங்களோ ?<br />ஒரு கடிதமாச்சும அனுப்ப வேண்டாம் ?<br />நான் ஒருத்தி இங்க தினமும் கடுதாசி வரும்<br />வரும்னு பாத்துட்டிருந்துட்டு ஏமாந்து போறேன்.<br />நிஜமாலுமே மறந்துட்டியாப்பா ?<br />திருப்பூரு சுத்தி அலைவீங்க.. எவடா கெடைப்பான்னு.<br />பேச்சுல உங்கள அடிச்சிக்க முடியுமா ?<br />அன்னிக்கி பஸ்சுல என்ன சொன்னீங்க ?<br />போனதும் முதல் வேலையா உன்னை<br />நெனச்சு நெனச்சு எழுதுன கவிதை<br />அமுட்டையும் அனுப்பறேன்னு.. நல்லாவே<br />இருந்துச்சு வசனம் ! இதை<br />படிச்ச பின்னாடி அனுப்புனீங்க..<br />எல்லாத்தையும் அடுப்புல போட்டு கொளுத்தீர்வேன்.<br />இனியும் லெட்டர் வரலைன்னா<br />சாப்பிடக் கூட மாட்டேன். ப்ளீஸ்டா..<br />ஒரே ஒரு கடுதாசி .. ப்ளீஸ்.<br />இங்க உங்க போட்டோவுக்கு நான் கிஸ்<br />பண்ணிப் பண்ணி போட்டோ நசிஞ்சு போச்சி.<br />அழுத்தக்கார ஆளுப்பா நீங்க.<br />போனா போச்சாதுன்னு பழைய டென்த்<br />படிச்சப்ப எடுத்த போட்டாவ குடுத்தா<br />என்ன சொன்னீங்க ? அப்படியே தலையில<br />கிரீடமும் கையில வேலையும் குடுத்திட்டா<br />சாமியாக்கும்னு நெனச்சு தின்னீரு<br />இட்டுக்கிட்டு போயிருப்பேன்னு.. லொள்ளு !<br />சரியாந்த லொள்ளு ! பஸ்சுனு கூட<br />பாக்காம போட்டோவுக்கு கிஸ்சு வேற<br />குடுக்கறீங்க<br />பதிலுக்கு உங்க போட்டாவக் கேட்டா<br />நீயே எம் பாக்கட்ல இருக்கு<br />எடுத்துககோன்னு.. சரியாந்த கொழுப்பு !<br />இனி என்ன எழுத ? எனக்கு எல்லாமே<br />நீங்க தான்.<br />( இந்தக் கடிதம் மிஸ்டேக் இல்லாம வர<br />காரணம் என் தங்கச்சி உங்க<br />கொழுந்தியாவின் திரு உதவி )<br /><br />( சொல்லக் கூசும் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதை, உயிர்மை வெளியீடு )யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-85074020174662336712009-08-31T13:30:00.000-07:002011-02-15T00:51:25.646-08:00தூண்டில் இருள்<span class=""></span><br /><span class=""></span><br />அடர்வன இருளை முதுகில்<br />படர்த்திச் செல்கிறாள்<br />சீராய் கத்தரிக்கப்பட்டு<br />காற்றில் அலையும்<br />நீள் இருள் இழைகளின் நுனியிலிருக்கும<br />தூண்டிற் முட்களில்<br />சிக்கித் தவிக்கின்றன<br />என் விழிக்கோளங்கள்<br /><br />அவள் காற்சுவடுகளுககு<br />திலகமிட்டபடி தொடர்கின்றன<br />செறுகப்பட்ட விழிதுவாரம் வழி பரவி<br />இமையோரங்களில் வழியுமென் உதிரத்துளிகள்<br /><br />கேச இழை வேர்களில் கூடிய மென்வலியில்<br />உணர்கிறாள் அகப்பட்டதின் பாரத்தை<br />மகிழ்ச்சியோ மிரட்சியோ<br />கூடுதல் விசையுடன்<br />இழுத்தோடுகிறாள்<br /><br />விரைதலில் பிணித்த வலியில்<br />நகரவியலாது ஸ்தம்பித்த கணம்<br />விழிகள் என் இமைகளிலிருந்து பெயர்ந்து<br />காலமற்ற காலத்தின் பெண்டுலங்களாய்<br />அவள் பிருஷ்டங்களை<br />உரசியுரசிச் செல்கின்றன<br /><br />விட்டு விலகிச் செல்லும்<br />என் கண்களை<br />கண்களின்றி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com17