துயரத்தின் ரேகை படர்ந்து
முகம் துவண்டு
இன்னும் சற்றைக்கெல்லாம்
தளும்பிவிடும் விழிகளுடன்
என் முன்னால்
நிலைக்கண்ணாடியில் அமர்ந்திருந்தவனை
அப்படியே பார்த்திருந்தேன் சிலகணங்கள்
ஏனோ முத்தமிடத்தோன்றியது
அவன் கன்னத்தில்
இதழ்குவித்து
அவன் கன்னத்தை நெருங்க
அதற்குள் அவன்
உதடுகுவித்து முத்தமிட்டுவிட்டான்
என் உதடுகளில்
அல்லது
என் முத்தம் தான்
குறி தவறிவிட்டதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

22 கருத்துரைகள்:
குறி தவறிவிட்டதா
இங்கு துவங்கிறது கவிதை
யாத்ரா பரிணமிக்கிறது யாத்திரைக் குறிப்புகளின் லிபி
சண்டை போட ஆரம்பிச்சாச்சு போலருக்கே.. :))
கவிதை அருமை. :)
:) கல்யாணத்துக்கப்புறம் எங்க ஆளையே காணோமேன்னு பாத்தேன். கல்யாண போட்டோவெல்லாம் எங்க? பிகாசாவில் கொஞ்சம் அப்லோட் செஞ்சு லிங்க் அனுப்புங்க.
:)
அட....
இது யாத்ராவுடைய கவிதை இல்லை... :)
நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்...
சும்ம்மா விளையாட்டுக்கு நண்பா....கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.
-ப்ரியமுடன்
சேரல்
நல்லாயிருக்கு யாத்ரா.
:)
///என் முத்தம் தான்
குறி தவறிவிட்டதா//
சந்தோசமா ??வருத்தமா??
அருமையான கவிதை
நல்ல கவிதை யாத்ரா...
நல்லயிருக்கு புதுமாப்ள!
nice.....
ரொம்ப பிடிச்சிருக்கு செந்தி.
நல்லாருக்கு யாத்ரா.
அருமை..
- பிரவின்ஸ்கா
ஒற்றைத் தோப்புகளாய் போன நம் தலைமுறைக்கு கண்ணாடிதான் ஆறுதல்.. கண்ணாடியுள் அழும் நமக்கும் நாமேதான் அரவணைப்பு..
செமத்தியான கவிதை. அட்டகாசம் பண்ணியிருக்கீங்க..
எழுதப்படாத கவிதைகள் இன்னும் கோடி இருக்கின்றன என்ற நம்பிக்கை இது போன்ற கவிதைகளைப் பார்க்கையில்தான் வருகிறது.
நல்லாயிருக்கு யாத்ரா...!
fine sir...
ம்ம்
:(
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
அருமை ..
பின்னூட்டமிட்ட நண்பர்களின் தகவலிலிருந்து.... கண்ணாடியை இனி விட்டுவைக்கலாம் அல்லவா:)
கவிதை எப்போதும்போல நன்றாக இருக்கிறது.
கருத்துரையிடுக