என் ரோஜாப் பதியன்கள்
என்னுடைய இரண்டு ரோஜாப் பதியன்களை
இன்று மாலை சந்திக்கப்போகிறேன்
நான் வருவது அவற்றிற்குத் தெரியும்
மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்
பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது
எனக்குப் புரிகிறது
நான் மெல்ல படியேறி வருகிறேன்
தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன
புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்
செருப்பைக் கழற்றி முகம் கழுவி
பூத்தூவாலையால் துடைத்துக்கொண்டு
கண்ணாடியில் எனைப் பார்த்து
வெளிவருகிறேன்
ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி
என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்
நான் ஊற்றும் நீரைவிட
நான் தான் முக்கியமதற்கு
மெல்ல என்னைக் கேட்கின்றன
என்ன செய்தாய் இன்று என
உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என
பொய் சொல்ல மனமின்றி
செய்த காரியங்களைச் சொன்னேன்
அதனை நினைத்துக்கொண்ட கணத்தைச் சொன்னேன்
சிரித்தபடி காலை பார்ப்போம்
போய்த்தூங்கு என்றன
மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்தேன்
கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்
காலை வருவதை எண்ணியபடி,
ஆத்மாநாம், இந்தப் பெயரிலேயே ஒரு ஈர்ப்பு இருக்கிறது பாருங்கள். இவரை அடைந்த கணம் முதல் கவிதை குறித்த என் அத்துனை பிம்பங்களும் மறுநிர்மாணம் செய்யப்பட்டது.
கிணற்றுத் தண்ணீரின் தன் பிம்பம் இவரை தழுவிக்கொள்ள அழைத்திருக்கிறது, எப்படி இந்த மனப்பிறழ்வு, 34 வயதில் தானே தனக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்ட நிகழ்வு வாழ்வெனும் பெரும்புதிர் குறித்து என்னை அலைக்கழியச்செய்திருக்கிறது.
48 வயதில் மணமுடித்து தன் 67 வயதில் மனைவியை இழக்க நேரிட்ட துயரில் தன்னை மீளா உறக்கத்தில் ஆழ்த்திக்கொண்ட ராம் மோகனாகிய காளிதாஸ் என்கிற ஸ்டெல்லா புரூஸின் என் நண்பர் ஆத்மாநாம் என்ற தொகுப்பின் இரட்டை பாதிப்பு வேறு எனக்குள்,
என் பிறந்த தினத்தில் (ஜீலை 6) தான், தான் செல்லும் நாளை தேர்ந்திருக்கிறார். ஆத்மாநாம் பெயர் வேறு, ஆத்மா நாமா நானா, தீராத மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறேன். நான் மட்டுமா, அவர் ஊற்றிய நீரை விட அவரை முக்கியமாக கருதிய அந்த ரோஜாப் பதியன்கள் அவரின் இழப்பை எப்படி எதிர்கொண்டிருக்கும், எதிர்ப்படும் ரோஜாப்பதியன்களில் எல்லாம் இழப்பின் மென்சோகம்.
திங்கள், 9 மார்ச், 2009
புதன், 4 மார்ச், 2009
போடா மயிரு
போடா மயிரு
போகிற வருகிற பயணிக்கிற பிரதேசமெங்கும்
பள்ளிச்சீருடையில் ரிப்பன் ரெட்டைப்பின்னல்
தட்டச்சுப்பயிலகத்தில் புட்டமுரசும் ஒற்றைப்பின்னல்
இரவு அங்கி ஏற்றியகொண்டை குடம் தெருக்குழாய்
தலைகுளித்த தூவாலைமுடிப்பு
தாவணி தலைகுளித்து முடியாதகுழல் கோயில்
திரையரங்கு அட்டைககுழாய் தேனீர்ச்சட்டை பாப்கத்தரிப்பு
வீட்டுவாசல் சிக்கலெடுத்து குழலுலர்த்தியபடி
மதிய சோத்துமூட்டை தயிர்சாதம் மயிரு
பூசாத சுவர் பொந்தில் நரைத்தும் நரைக்காத சுருள்கள்
இணையமையம் தட்டச்சுவிசைப்பலகையில
உதிர்ந்திருக்கும் நீண்ட ஒற்றைக்கற்றை
பாஞ்சாலி கூந்தல் இடைவரை
திரும்பிப்பார்ப்பதற்குள் திருப்பதி காணிக்கை
மாவிலைத்தோரணமாய் கத்தரித்த நெற்றிமுடி
வல இட நடு வகிடு வகிடின்றி
தோள்வரை முதுகுகீழ் இடை புட்டம் அதற்கும் கீழ்
தார்ச்சாலையாய் மலைப்பாதையாய்
வண்ணம்பூசிய கண்டிஷனர் பளபளப்பு
முடியாத குழலை அளையும் காற்றின் கரங்கள்
சுதந்திர கொடி சே மயிர்
பிரெஞ்சுப்புரட்சி மன்னிக்கவும் பின்னமைப்பு
குதிரைவால் பக்கக்கொண்டை
நாய் கன்று ஆடு பூனைக்குட்டியை நீவிவிடுவது போலன்றி
கூந்தல் வருடல் எளிய சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டிருக்கிறது
பின்னாமல் கிளிப் போட்டிருந்த இருசக்கர வாகனம்
சமீபமாய் வாகனத்தைச் செலுத்தி
கவனியுங்கள் மரியாதையுடன்
உங்க முடி அழகா இருக்குங்க என்றதற்கு
போடா மயிரு
செருப்பு பிஞ்சிரும்
போகிற வருகிற பயணிக்கிற பிரதேசமெங்கும்
பள்ளிச்சீருடையில் ரிப்பன் ரெட்டைப்பின்னல்
தட்டச்சுப்பயிலகத்தில் புட்டமுரசும் ஒற்றைப்பின்னல்
இரவு அங்கி ஏற்றியகொண்டை குடம் தெருக்குழாய்
தலைகுளித்த தூவாலைமுடிப்பு
தாவணி தலைகுளித்து முடியாதகுழல் கோயில்
திரையரங்கு அட்டைககுழாய் தேனீர்ச்சட்டை பாப்கத்தரிப்பு
வீட்டுவாசல் சிக்கலெடுத்து குழலுலர்த்தியபடி
மதிய சோத்துமூட்டை தயிர்சாதம் மயிரு
பூசாத சுவர் பொந்தில் நரைத்தும் நரைக்காத சுருள்கள்
இணையமையம் தட்டச்சுவிசைப்பலகையில
உதிர்ந்திருக்கும் நீண்ட ஒற்றைக்கற்றை
பாஞ்சாலி கூந்தல் இடைவரை
திரும்பிப்பார்ப்பதற்குள் திருப்பதி காணிக்கை
மாவிலைத்தோரணமாய் கத்தரித்த நெற்றிமுடி
வல இட நடு வகிடு வகிடின்றி
தோள்வரை முதுகுகீழ் இடை புட்டம் அதற்கும் கீழ்
தார்ச்சாலையாய் மலைப்பாதையாய்
வண்ணம்பூசிய கண்டிஷனர் பளபளப்பு
முடியாத குழலை அளையும் காற்றின் கரங்கள்
சுதந்திர கொடி சே மயிர்
பிரெஞ்சுப்புரட்சி மன்னிக்கவும் பின்னமைப்பு
குதிரைவால் பக்கக்கொண்டை
நாய் கன்று ஆடு பூனைக்குட்டியை நீவிவிடுவது போலன்றி
கூந்தல் வருடல் எளிய சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டிருக்கிறது
பின்னாமல் கிளிப் போட்டிருந்த இருசக்கர வாகனம்
சமீபமாய் வாகனத்தைச் செலுத்தி
கவனியுங்கள் மரியாதையுடன்
உங்க முடி அழகா இருக்குங்க என்றதற்கு
போடா மயிரு
செருப்பு பிஞ்சிரும்
செவ்வாய், 3 மார்ச், 2009
பூர்வீக ஊர்
பூர்வீக ஊர்
பூர்வீக ஊருக்கு சென்றிருந்தேன்
சுற்றுக்கட்டு வீடுகள்
நவீன மோஸ்தரில் மாற்றியமைக்கப்பட்டு
வயல் பம்புசெட்டு வெறுமையாய்
கழிந்து கழுவும் குளம் நீரற்று
கிரிக்கெட் மைதானம் காணாமல் போய்
கோலி பம்பரம் கில்லி கள்ளன்போலிஸ்
விளையாடும் பிள்ளைகள் தொலைந்து
ஊர்பெருசுகள் தர்மகர்த்தா உட்பட போய்சேர்ந்து
கல்பனா இளவரசுவையும்
பானு இளங்கோவையும்
காதலித்து மணமுடித்து
பாபு சத்யா கோகிலா மருந்து குடித்து இறந்து
அஞ்சலி மட்டும் பிழைத்து
அந்த பாட்டி இறந்தபிறகு
கணபதி தாத்தா மறுமணம் முடித்து
எதிர்வீட்டு தேவசேனா அக்காவுக்கு விவாகரத்தாகி
சகுந்தலை அக்கா பாண்டியனோடு ஓடிப்போய்
சிவபாதம் அண்ணன் காணாமல் போய்
கண்ணன் பிரம்மச்சாரியாய்
கதை நீண்டு கொண்டேயிருந்தது
தெய்வானைக்கு ஒரு மகன் இரண்டு மகளாம்
அடிக்கடி அவள் பேச்சில்
என் பெயர் வருமாம்,
பூர்வீக ஊருக்கு சென்றிருந்தேன்
சுற்றுக்கட்டு வீடுகள்
நவீன மோஸ்தரில் மாற்றியமைக்கப்பட்டு
வயல் பம்புசெட்டு வெறுமையாய்
கழிந்து கழுவும் குளம் நீரற்று
கிரிக்கெட் மைதானம் காணாமல் போய்
கோலி பம்பரம் கில்லி கள்ளன்போலிஸ்
விளையாடும் பிள்ளைகள் தொலைந்து
ஊர்பெருசுகள் தர்மகர்த்தா உட்பட போய்சேர்ந்து
கல்பனா இளவரசுவையும்
பானு இளங்கோவையும்
காதலித்து மணமுடித்து
பாபு சத்யா கோகிலா மருந்து குடித்து இறந்து
அஞ்சலி மட்டும் பிழைத்து
அந்த பாட்டி இறந்தபிறகு
கணபதி தாத்தா மறுமணம் முடித்து
எதிர்வீட்டு தேவசேனா அக்காவுக்கு விவாகரத்தாகி
சகுந்தலை அக்கா பாண்டியனோடு ஓடிப்போய்
சிவபாதம் அண்ணன் காணாமல் போய்
கண்ணன் பிரம்மச்சாரியாய்
கதை நீண்டு கொண்டேயிருந்தது
தெய்வானைக்கு ஒரு மகன் இரண்டு மகளாம்
அடிக்கடி அவள் பேச்சில்
என் பெயர் வருமாம்,
திங்கள், 2 மார்ச், 2009
வள்ளி புதுக்கோட்டையில்
வள்ளி புதுக்கோட்டையில்
கவிதா புல்லரம்பாக்கத்தில்
ஐந்தாம் வகுப்பில் பார்த்தது
செல்லம்மா ஆரணியில்
நாகம்மா பினேஸ்பாளையத்தில்
கீதா வில்லிவாக்கத்தில்
புவனா மயிலாப்பூரில்
ராதிகா பேர்னாம்பேட்டில்
தமிழ்வாணி சிங்கபெருமாள்கோயிலில்
கயல்விழி ஊத்துக்கோட்டையில்
பூர்ணிமா கோயம்புத்தூரில்
சுபாஷினி காசிமேட்டில்
மேனகா அடுத்ததற்கு அடுத்த தெருவில்
கல்யாணி இதே தெருவின் கடைசிவீட்டில்
தேவிகா அலுவலக சாலையிலுள்ள வீட்டில்
சாவித்ரி மேம்பாலத்தை ஒட்டிய குடிசைப்பகுதியில்
ஓவியா துளசி திரையரங்கு பக்கத்துதெருவில்
மங்கையர்க்கரசி திருநீர்மலையில்
இன்னும் பெயர் தெரியாத பெண்கள்
பெயர் தெரியாத ஊர்களில்
வாக்கப்பட்டு போக
இவர்களில் ஒருத்தியைக்கூட
மணக்க இயலாத துரதிஷ்டநிலை
பார்கவி எந்த ஊருக்கு போவாளோ
கவிதா புல்லரம்பாக்கத்தில்
ஐந்தாம் வகுப்பில் பார்த்தது
செல்லம்மா ஆரணியில்
நாகம்மா பினேஸ்பாளையத்தில்
கீதா வில்லிவாக்கத்தில்
புவனா மயிலாப்பூரில்
ராதிகா பேர்னாம்பேட்டில்
தமிழ்வாணி சிங்கபெருமாள்கோயிலில்
கயல்விழி ஊத்துக்கோட்டையில்
பூர்ணிமா கோயம்புத்தூரில்
சுபாஷினி காசிமேட்டில்
மேனகா அடுத்ததற்கு அடுத்த தெருவில்
கல்யாணி இதே தெருவின் கடைசிவீட்டில்
தேவிகா அலுவலக சாலையிலுள்ள வீட்டில்
சாவித்ரி மேம்பாலத்தை ஒட்டிய குடிசைப்பகுதியில்
ஓவியா துளசி திரையரங்கு பக்கத்துதெருவில்
மங்கையர்க்கரசி திருநீர்மலையில்
இன்னும் பெயர் தெரியாத பெண்கள்
பெயர் தெரியாத ஊர்களில்
வாக்கப்பட்டு போக
இவர்களில் ஒருத்தியைக்கூட
மணக்க இயலாத துரதிஷ்டநிலை
பார்கவி எந்த ஊருக்கு போவாளோ
வீடு
வீடு
நெடுங்காலமாய்
அந்த சாலை வழியில்
பூட்டியே கிடக்கிறது
நிராதரவாய் ஒரு வீடு
சிகரெட் பற்ற வைத்து
படியில் அமர்ந்துவிட்டேன்
திண்ணையில் பிள்ளைகள்
கல்லாங்காய் விளையாடிக்கொணடு
வாசலில் நொண்டியாடி
வீட்டுப்பெண்கள் படிகளில் அமர்ந்து
வாசல் கோலம் பற்றி பேசி
வாசலில் பந்தல் கூட
பெண்பிள்ளை சமைந்திருக்கலாம்
தாத்தா தினசரியுடன்
பாட்டி பாக்கு தட்டிக்கொண்டு
மரண ஓலம் அடங்கி
கழுவப்பட்ட ஈரம் வாசலில்
சித்தப்பா இரவுப்பணி முடிந்து
புங்கமரத்தடியில்
கயிறு கட்டிலில்
தாயக்கட்டை சத்தம் கூட
தீபாவளி பட்டாசு ஒளி(லி)
பொங்கலோ பொங்கல் குரல்கள்
லயா குட்டி ஆட
தாணு பாட
மற்ற குழந்தைகள் கும்மாளமிட,,,,,,,,,,,,,
இப்படியெல்லாம்
மனதில் ஓடிக்கொண்டிருப்பதை
இந்த வீடு பார்த்திருக்கும்,
நெடுங்காலமாய்
அந்த சாலை வழியில்
பூட்டியே கிடக்கிறது
நிராதரவாய் ஒரு வீடு
சிகரெட் பற்ற வைத்து
படியில் அமர்ந்துவிட்டேன்
திண்ணையில் பிள்ளைகள்
கல்லாங்காய் விளையாடிக்கொணடு
வாசலில் நொண்டியாடி
வீட்டுப்பெண்கள் படிகளில் அமர்ந்து
வாசல் கோலம் பற்றி பேசி
வாசலில் பந்தல் கூட
பெண்பிள்ளை சமைந்திருக்கலாம்
தாத்தா தினசரியுடன்
பாட்டி பாக்கு தட்டிக்கொண்டு
மரண ஓலம் அடங்கி
கழுவப்பட்ட ஈரம் வாசலில்
சித்தப்பா இரவுப்பணி முடிந்து
புங்கமரத்தடியில்
கயிறு கட்டிலில்
தாயக்கட்டை சத்தம் கூட
தீபாவளி பட்டாசு ஒளி(லி)
பொங்கலோ பொங்கல் குரல்கள்
லயா குட்டி ஆட
தாணு பாட
மற்ற குழந்தைகள் கும்மாளமிட,,,,,,,,,,,,,
இப்படியெல்லாம்
மனதில் ஓடிக்கொண்டிருப்பதை
இந்த வீடு பார்த்திருக்கும்,
மயானம் செல்லும் வழி
மயானம் செல்லும் வழி
மயானம் எங்கு இருக்கிறது
நேரே சென்று
ஒன்று இரண்டு மூன்று
நான்காவது இடது நிழற்சாலை( நிழலின்றி ) வழிசென்று
பிரதானசாலையின் வலத்தில்
எல்லை முடியும் இடத்தில்
கீழிறங்கும் செம்மண் சாலையில்
அம்புக்குறியுடன் அமரத்தோட்டம்
எதுவும் எளிதில்
அடைந்துவிடுகிற தூரத்திலில்லை
கடும்வெம்மையின் இளைப்பாறுதலுக்கு
குளிர்பானம் அருந்திச்செல்ல உத்தேசம்
இறுதிப்பயணத்தை நடந்தே கடப்பது ஆறுதலளிக்கிறது
சகபயணியின் இறுதி ஊர்வலத்தில்
நாக்கை துருத்தி சீட்டியடித்து
பிரமாதமான அங்க அசைவுகளோடு ஆடி
சகபயணி சாக்கில்
எந்த குறையுமற்று
சகல சடங்குகளுடன்
மனநிறைவாய் அமைந்துவிட்டது
என் இறுதி ஊர்வலம்
தனிமை தன் ஒரு
துணையை இழந்தது,
மயானம் எங்கு இருக்கிறது
நேரே சென்று
ஒன்று இரண்டு மூன்று
நான்காவது இடது நிழற்சாலை( நிழலின்றி ) வழிசென்று
பிரதானசாலையின் வலத்தில்
எல்லை முடியும் இடத்தில்
கீழிறங்கும் செம்மண் சாலையில்
அம்புக்குறியுடன் அமரத்தோட்டம்
எதுவும் எளிதில்
அடைந்துவிடுகிற தூரத்திலில்லை
கடும்வெம்மையின் இளைப்பாறுதலுக்கு
குளிர்பானம் அருந்திச்செல்ல உத்தேசம்
இறுதிப்பயணத்தை நடந்தே கடப்பது ஆறுதலளிக்கிறது
சகபயணியின் இறுதி ஊர்வலத்தில்
நாக்கை துருத்தி சீட்டியடித்து
பிரமாதமான அங்க அசைவுகளோடு ஆடி
சகபயணி சாக்கில்
எந்த குறையுமற்று
சகல சடங்குகளுடன்
மனநிறைவாய் அமைந்துவிட்டது
என் இறுதி ஊர்வலம்
தனிமை தன் ஒரு
துணையை இழந்தது,
பிறழ்வு
பிறழ்வு
என்னவென்று தெரியவில்லை
அழுத்தமாய் கனக்கிறது
சிகரெட்டின் தேவையைப் பற்றிய உணர்வு
ஏதேதோ துண்டுத்துண்டாய் நினைவில்
குடித்து வெகுநாளாயிற்று
தவறாக நினைத்திருப்பாள்
சற்று வெளிப்படையாகவே பார்த்துக்கொண்டிருந்தேன்
தேனீர்க்கடையில் காலை சுற்றிய நாயை துரத்த
அந்த பிச்சைக்காரர் ரொட்டித்துண்டு போட்டார்
வெகுநேர்த்தியான பின்னல்களுடனான
சிலந்தி வலையை கிழித்தெறியும்
மூர்க்க்ம் அலைக்கழிக்கிறது,
வாகன கைப்பிடியில்
சருகென கையிலெடுக்க ஓனான்
விடியாத அதிகாலை மங்கிய வெளிச்சத்தில்
வாகனத்திற்கு குறுக்கே
பாம்பை பின்தொடர்ந்து கீரி
படுக்கைக்கருகே பல்லியின் அறுந்த வால்
பாழாய்ப்போன தவளைச் சத்தம் வேறு
சாளரக்கம்பியில் நின்று
பார்த்துச் சென்றது
வழக்கமான அணில்
பரணில் உருளும் சப்தம்
எப்படியோ உறங்கிப்போனேன்
இன்று புகைப்பிடிக்கையில்
ரொட்டித்துண்டோடு காததிருந்தேன்
அந்த நாயின் வருகையை எதிர்நோக்கி
என்னவென்று தெரியவில்லை
அழுத்தமாய் கனக்கிறது
சிகரெட்டின் தேவையைப் பற்றிய உணர்வு
ஏதேதோ துண்டுத்துண்டாய் நினைவில்
குடித்து வெகுநாளாயிற்று
தவறாக நினைத்திருப்பாள்
சற்று வெளிப்படையாகவே பார்த்துக்கொண்டிருந்தேன்
தேனீர்க்கடையில் காலை சுற்றிய நாயை துரத்த
அந்த பிச்சைக்காரர் ரொட்டித்துண்டு போட்டார்
வெகுநேர்த்தியான பின்னல்களுடனான
சிலந்தி வலையை கிழித்தெறியும்
மூர்க்க்ம் அலைக்கழிக்கிறது,
வாகன கைப்பிடியில்
சருகென கையிலெடுக்க ஓனான்
விடியாத அதிகாலை மங்கிய வெளிச்சத்தில்
வாகனத்திற்கு குறுக்கே
பாம்பை பின்தொடர்ந்து கீரி
படுக்கைக்கருகே பல்லியின் அறுந்த வால்
பாழாய்ப்போன தவளைச் சத்தம் வேறு
சாளரக்கம்பியில் நின்று
பார்த்துச் சென்றது
வழக்கமான அணில்
பரணில் உருளும் சப்தம்
எப்படியோ உறங்கிப்போனேன்
இன்று புகைப்பிடிக்கையில்
ரொட்டித்துண்டோடு காததிருந்தேன்
அந்த நாயின் வருகையை எதிர்நோக்கி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)