சனி, 14 மார்ச், 2009

சதுரங்கம்

சதுரங்கம்

சிப்பாய்களின் உயிர் மலிவு
உங்கள் ஒரு மந்திரியை பணயம் வைத்து
என் இரண்டு யானைகளை வீழ்த்தினீர்கள்
ஒரு தட்டில் உங்கள் இன்னொரு மந்திரி யானை
மற்றொன்றில் என் இரண்டு குதிரை மந்திரி
உங்கள் குரூர சமண்பாடு இது
ராஜ்யத்தைக் காக்கும்
நிர்க்கதி நிலைக்குத்தள்ளி
என் ராணியைக் கவர்ந்தீர்கள்
உங்கள் சூட்சுமங்கள்
அறிந்திருக்கவில்லை
வெற்றி இதற்கு
உங்கள் விசுவாசிகள்
எவரையும் காவு கொடுக்க தயாராயிருந்தீர்கள்
அவர்களோ
நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.

16 கருத்துகள்:

புதியவன் சொன்னது…

//அவர்களோ
நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.//

சதுரங்கத்தை வைத்து வித்தியாசமான கவிதை...மிகவும் அருமை...
வாழ்த்துக்கள் யாத்ரா...

யாத்ரா சொன்னது…

வாங்க புதியவன், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

ஆதவா சொன்னது…

சதுரங்கம் வைத்து கவிதையா... பலெ.. எனக்கு சதுரங்கம் விளையாட ரொம்ப பிடிக்கும்.

மாதவராஜ் சொன்னது…

யாத்ரா!

கவிதை நன்றாக வந்திருக்கு.

யாத்ரா சொன்னது…

ஆதவா வருகைக்கு மிக்க நன்றி,

மாதவராஜ் ஐயா, தங்களின் பின்னூட்டங்கள் என்னை நெகிழ்வடையச்செய்கிறது

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நல்லா வந்திருக்குங்க கவிதை.

யாத்ரா சொன்னது…

சுந்தர் சார் ரொம்ப மகிழ்ச்சி

anujanya சொன்னது…

அற்புதம். சாரி, கொஞ்சம் லேட்டா வரேன். பிற கவிதைகளும் படித்தேன். மிக மிக அழகாக எழுதுகிறீர்கள். இப்படி யாராவது வந்தால் பரபரப்பாக இருக்கு.

அனுஜன்யா

யாத்ரா சொன்னது…

வாங்க அனுஜன்யா, நீங்க வந்ததே மகிழ்ச்சி

பெயரில்லா சொன்னது…

vaazththukkaL

யாத்ரா சொன்னது…

ருத்ரன் சார், தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

Sugumar (சுகுமார்) சொன்னது…

யதார்த்த கவிதை! அரசியல் எல்லா இடத்திலும் எல்லா சமையங்களிலும் இருக்கிறது. அதனால் இந்த கவிதையை படிக்கையில் ஒரு வித சோகமும் கோமமும் வருது...

யாத்ரா சொன்னது…

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சுகுமார் அவர்களே

Joe சொன்னது…

நல்ல கவிதை.
"புரியவில்லை, விளக்கவும்" என்று யாரும் பின்னூட்டம் போடவில்லையே எப்படி? ஹா ஹா!

எனக்கும் சதுரங்கம் விளையாட ரொம்ப பிடிக்கும். அதிகம் ஜெயிப்பேனா, தோல்வியுருவேனா என்று கேட்கக் கூடாது.

யாத்ரா சொன்னது…

ஜோ அவர்களே, தங்களின் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

அருமை!

உங்களின் இந்தக்கவிதையை நான் 'உயிரோசை' யில் வாசித்தேன். வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்